(758)

(758)

ஒன்றிரண்டு மூர்த்தியா யுறக்கமோடு ணர்ச்சியாய்

ஒன்றிரண்டு காலமாகி வேலைஞால மாயினாய்

ஒன்றிரண்டு தீயுமாகி யாயனாய மாயனே

ஒன்றிரண்டு கண்ணினானு முன்னையேத்த வல்லனே

பதவுரை

ஒன்று இணர்டு மூர்த்தி ஆய்

ப்ரதாநமான ஒரு மூர்த்தியும் அப்ரதாநமான இரண்டு மூர்த்தியுமாய்
உறக்கமோடு உணர்ச்சி ஆய்

அஜ்ஞாநத்துக்கும் ஸத்ஜ்ஞானத்துக்கும் நியாமகனாய்
ஒன்று இரண்டு காலம் ஆகி

மூன்று காலங்களுக்கும் நிர்வாஹனாய்
வேலை ஞாம் ஆயினாய்

கடல்சூழ்ந்த பூமண்டலத்துக்கு ப்ரவத்தகனாய்
ஒன்று இரண்டு தீயும் ஆகி

மூன்று அக்நிகளுக்கும் நிர்வாஹனாய்
ஆயன் ஆய

கோபாலஸஜாதீயனாய் அவதரித்த
மாயனே!

ஆச்சர்யபூதனான எம்பெருமானே!
ஒன்று இரண்டு கண்ணினாலும்

முக்கண்ணனான சிவபிரானும்
உன்னை

உன்னை
ஏந்த வல்லனே

துதிக்க வல்லவனே!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ப்ரஹ்ருத்ராதிகளைச் சரீரமாகக்கொண்டு அவர்களுக்கு நியாமகனாய் என்கிறது முதலடைமொழி. “முனிபெ நான்முகனே முக்கண்ணப்பா” இத்யாதிகளிற்போல இங்கும் ஸாமாநாதிகரண்யம் சரீர சரீர பாவத்தைப் பற்றியதாம். உறக்கமோடு உணர்ச்சியாய்= இலக்கணையால் அஜ்ஞானத்தை உறக்கமென்கிறது. ஞானமற்றவனுக்கு உறக்கம் தவிர வேறு தொழிலிலாமை அறியத்தக்கது. அஜ்ஞாகம், அந்யதாஜ்ஞாநம், விபரீதஜ்ஞாகம், ஸம்சயம், மறப்பு இவையெல்லாம் உறக்கமேயாம். உறக்கத்துக்கும் உணர்ச்சிக்கும் எம் பெருமான் நிர்வாஹகனாகையாவ தென்னென்னில்; தன் ஸ்வரூப யாதாத்மியத்தைச் சிலர்க்கு உள்ளபடி ஸக்ஷாத்கரிக்கச் செய்பவனும் தானே; த்ரிமூர்த்திஸாம்ய வ்யாமேஹாதிகளாலே சிலரை மயங்குபவனும்தானே என்கை. ஒன்றிரண்டு காலமாகி = இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்  என்று மூன்று காலங்களுக்கும் நிர்வாஹகன் என்பது ஸாமாந்யமான அர்த்தம். ஸத்வகுணம் மிகும்படியான ஸாத்விககாலத்துக்கும், ரஜோகுணம் மிகும்படியான ராஜஸ காலத்துக்கும், தமோகுணம் மிகும்படியான தாமஸகாலத்துக்கும் கடவன் என்கை விசேஷார்த்தம்.

ஒன்றிரண்டு தீ = ஆஹவநீயம், கார்ஹத்யம், தஹிணாக்கி என்பவை. ஏத்தவல்லனே என்றது- ஏத்தவல்லவனல்லன் என்றபடி.    (எ)

English Translation

You became the One and Two, then you became the sleep and sense. O You became the past, present and future in the Ocean-Earth. You became the three fires and took a birth in Gokulam. Words of praise do fail for even Lord Siva who has three eyes.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top