(754)

(754)

ஐந்துமைந்து மைந்துமாகி யல்லவற்று ளாயுமாய்

ஐந்துமூன்று மொன்றுமாகி நின்றவாதி தேவனே

ஐந்துமைந்து மைந்துமாகி யந்தரத்த ணைந்துநின்று

ஐந்துமைந்து மாயநின்னை யாவர்காண வல்லரே.

பதவுரை

ஐந்தும்

ஆகாசாதி பூதங்கள் ஐந்தும்
ஐந்தும்

ஜ்ஞாநேந்திரியங்கள் ஐந்தும்
ஐந்தும்

கருமேந்திரியங்கள் ஐந்தும்
ஐந்தும்

தந்மாத்ரைகள் ஐந்தும்
மூன்றும்

ப்ரக்ருதி, மஹாந், அஹங்காரம் என்ற மூன்றும்
ஒன்றும்

மநஸ்ஸாகிய ஒன்றும்
ஆகி

(ஆக இப்படிப்பட்ட இருபத்தினாலு தத்துவங்கட்கு) நிர்வாஹகனாய்
அல்ல வற்றுளாயும் ஆய் நின்ற

கீழ்ச்சொல்லப்பட்ட அசித்துப் போலன்றியே சேதநராயுள்ளவர்கட்கும் அந்தர்யாமியாய் எழுந்தருளியிருக்கிற
ஆதிதேவனே!

முழு முதற்கடவுளே!
அந்தரத்து அணைந்து! நின்று

பரமபதத்திலே பொருந்தி நின்று
ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி

அப்ராக்ருத பஞ்சசக்திகளுக்கும் ஜ்ஞாநேதிரியங்களைந்துக்கும், கருமேந்திரியங்களைந்துக்கும் நிர்வாஹகனாய்
ஐந்தும் ஐந்தும் ஆய நின்னை

சப்தாதிபோக்யங்களைந்துமாய், போகஸ்தாகம், போகோபகரணம், வைகுந்தத்தமர் முனிவர் முக்தர் என்ற ஐந்து வகுப்புகட்கு நியாமகனுமா யெழுந்தருளியிருக்கிற உன்னை.
யாவர் காண வல்லர்

யார் அறியவல்லர்? (யாருமறியகில்லார்.)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – லீலாவிபூதிவிசிஷ்டனாயும் நித்யவிபூதிவிசிஷ்டனாயும் நீ எழுந்தருளியிருக்குமிருப்பை நிர்ஹேதுகக்ருபையாலே எனக்கு நீ காட்டியருள நான் எளிதிற்கண்டாப்போல் ஸ்வஸரமர்த்தியத்தாற் காணக்கூடியவர்கள் யாருமில்லை யென்கிறார். முன்னிரண்டடிகளால் லீலாவிபூதியோகமும், பின்னிரண்டடிகளால் நித்யவிபூதியோகமும் அருளிச்செய்யப்படுகின்றன. முதலடியில், ஐந்தும்- ப்ருதிவி. அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம் (நிலம் நீர் தீ கால்விசும்பு) என்ற பஞ்சபூதங்கள். ஐந்தும் = த்வக்கு, சக்ஷûஸ், ச்ரோத்ரம், ஜிஹ்வா, க்ராணம் (செவ் வாய் கண் மூக்கு உடல்) என்ற பஞ்சஜ்ஞாநேந்திரியங்கள். ஐந்தும்- வாக்கு’ பாணி, பரதம், பாயு, உபஸ்தம் (வாய்,கை, கால், குதம்,குறி)என்ற பஞ்சகர்மேந்திரியங்கள். இரண்டாமடியில், ஐந்தும் = சப்ததந்மாத்ரை, ஸ்பர்சதந்மாத்ரை,ரூபதந்தமாதரை, ரஸதந்மாத்ரை, கந்ததந்மாத்ரை என்னும் பஞ்சதந்மாத்ரைகள்.

மூன்றும் = அலிபக்ததமஸ்ளென்றும் அக்ஷரமென்றும் சில அவஸ்தைகளை யுடைந்தாயிருக்கிற ப்ரக்ருதி (1), அந்தப்ரக்ருதியில் நின்றும் குணவைஷம்யமடியாகப் பிறக்கிற விகாரங்களுள் முதலதான மஹாக் (2), அந்த மஹத்தத்வத்தில் நின்றும் பிறக்கிற அஹங்காரம் (3), ஆக மூன்று, ஒன்று- மநஸ்ஸு. ஆக இருபத்தினாலு தத்துவங்கள் சொல்லப்பட்டன. (முதலடியில் பதினைந்து; இரண்டாமடியில் ஒன்பது, ஆக-24.) ஆகிநின்ற என்ற ஸாமாநாதிகரண்யம்- இத் தத்துவங்களுக்கும் எம்பெருமானுக்குமுள்ள ஸம்பந்தங்களெல்லாவற்றையும் உளப்படுத்தியதாம். அல்லவற்றுளாயுமாய்- இப்படி இருபத்தினாலாக வகுக்கப்பட்ட ப்ரக்ருதியிலே ஸம்ஸ்ருஷ்டரான ஜீவாத்மாக்களுக்கு அந்தர்யாமியாய் என்றபடி, அல்லாவை என்றால் ஜீவாத்மாக்களை எங்ஙனே குறிக்கும்படியென்னில்; அல்லவை என்பதற்கு ‘அப்படியாகாதவை’ என்று பொருள். ப்ரகரணாநுகுணமாக ‘அசித்தாகாதவை’ என்று பொருளாய் அசேக்நவ்யாவ்ருத்தரான சேதநர்களைக் குறிக்கிறபடி.

இனி பின்னடிகளில், திவ்யமங்களவிக்ரஹத்தையும் நித்யவிபூதியோகத்தையும் தமக்குக் காட்டித்தந்தருளினபடியை அருளிச்செய்கிறா. (1) ஐந்தும் = *** ***  பஞ்சசக்திகளாவன – “*** ***  என்று சொல்லப்படுகிறவையாய் நித்யவிபூதியிலுள்ளவையான பஞ்சபூதங்கள். வாஸுதேவனுடைய திவ்யமங்களவிக்ரஹம் பஞ்ச சத்திமயமென்று வேதாந்த நூற்கொள்கை. ஐந்தும், ஐந்தும், ஐந்தும் – அப்ராக்ருதங்களான ஜ்ஞாநேந்திரியங்கனைந்தும், கருமேந்திரியங்களைந்தும், சப்தாதி போக்யங்களைந்தும். ஐந்தும் = ***  நங்களென்ற வகுப்பு (1), ஜொஹொவதுரணங்களென்ற வகுப்பு (2), “வைகுந்தத்தமரரும் முனிவரும்” என்ற இரண்டு வகுப்புகள் (4), முக்தர் என்ற வகுப்பு (50)- அக ஐந்து கோடிகள். அந்தரம் = ஆகாசம்; பரமாகாசமெனப்படுகிற பரமபதம்.  (ங)

English Translation

You became the Five, the Five, the Five in all, the indweller. The Five and Three, the wonder-Lord, the origin of all that is; Then the Five, you stand in high Heaven above. The Five, the Five that you became, who can solve the mystery?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top