(705)
என்னை வருக வெனக்குறித்திட் டினமலர் முல்லையின் பந்தர்நீழல்
மன்னி யவளைப் புணரப்புக்கு மற்றென்னைக் கண்டுழ றாநெகிழ்ந்தாய்
பொன்னிற வாடையைக் கையில்தாங்கிப் பொய்யச்சங் காட்டிநீ போதியேலும்
இன்னமென் கையகத் தீங்கொருநாள் வருதியே லெஞ்சினம் தீர்வன்நானே
பதவுரை
| என்னை |
– |
என்னை |
| வருக என |
– |
(இன்னவிடத்திற்கு) வாவென்று |
| குறித்திட்டு |
– |
ஸந்கேதம் பண்ணி வைத்து விட்டு |
| இனம் மலர் முல்லையின் பந்தர்நீழல் |
– |
நிறைந்த மலர்களையுடைய முல்லைப் பந்தலின் நிழலிலே |
| மன்னியவளை |
– |
(வெகு காலமாய்ப்) பதுங்கி நின்ற ஒருத்தியை |
| புணர புக்கு |
– |
ஸம்ச்லேஷிக்கப் போய் |
| மற்று என்னை கண்டு |
– |
பிறகு என்னைப் பார்த்து |
| உழறா |
– |
கலங்கி |
| நெகிழ்ந்தாய் |
– |
அப்பாலே நழுவினாய்; |
| பொன் நிறம் ஆடையை |
– |
பீதாம்பரத்தை |
| கையில் தாங்கி |
– |
கையிலே தாங்கிக் கொண்டு |
| பொய் |
– |
பொய்யாக |
| அச்சம் காட்டி |
– |
நீ எனக்கு அஞ்சினமாக நான் பாவிக்கும்படி செய்து கொண்டு |
| நீ போதி ஏலும் |
– |
நீ (என் கைக்கு அகப்படாமல்) ஓடிப் போன போதிலும் |
| இன்னம் |
– |
இனி |
| ஈங்கு |
– |
இங்கே |
| என் கை அகத்து |
– |
என்னிடத்திற்கு |
| ஒரு நாள் வருதிஏல் |
– |
ஒரு நாளாகிலும் வருவாயாகில் |
|
( அப்போது) |
||
| நான் என் சினம் தீர்வன் |
– |
நான் என் கோபத்தை தீர்த்துக் கொள்வேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- [என்சினம் தீர்வன்நானே] என்கிறவிடத்தைக் கோயிலில் திருவத்யயநோத்ஸவதத்தில் ”உய்ந்த பிள்ளை” என்பாரொரு அரையர் அபிநயிக்கும்போது, கையாலே அடிப்பதும் காலாலே துவைப்பதுமாய் அபிநயித்தார். அதாவது, – மறுபடியும் நீ என் கையில் அகப்படும்போது உன்னை நான் கையாலடித்தும் காலால் துகைத்தும் என் கோபத்தைத் தணித்துக் கொள்வேன் என்பதாகக் கருத்தை விரித்தார். அப்போது கோஷ்டியில் எழுந்தருளியிருந்த எம்பார் இங்ஙனே அரையர்காட்டிய அபிநயத்தைக் கடாக்ஷித்து அரையர்க்கு ராஸிக்யம் போராதென்று திருவுள்ளம் பற்றி, ” கெடுவாய்! அப்படி அவள் செய்தாளாகில் என்றிருக்கிற கண்ணனுக்கு அது வருத்தமோ! வேப்பிலையுருண்டையோ? இது அவனுக்கு “*******” மாகுமன்றோ ஆகையால் அதுவன்று கருத்து; முகங்கொடுக்காமல் முகத்தை மாறவைத்து என் கோபத்தைத் தணித்துக் கொள்வேன் என்னுங் கருத்துத் தோன்ற, கையிட்டு முகத்தை மறைத்துத் திரியவைத்தருளிக் காட்ட வேணுமென்று தாம் அவ்வாறாக அபிநயித்துக் காட்டினார் என்று ப்ரஸித்தம்.
English Translation
O Lord who prefers the serpent-couch! We are not the girls of those old times, nor are we your favored ones with dark eyes that match the bumble-bees. Pray stop coming to our place at odd hours. Infatuated by your beautiful clothes, auspicious face, coral lips and; dark curls, we were taken in by your lies. One day is enough! No more of your stories, Sir, please go!
