(700)

(700)

கருமலர்க் கூந்த லொருத்திதன்னைக் கடைக்கணித்து ஆங்கே யொருத்திதன்பால்

மருவி மனம்வைத்து மற்றொருத்திக் குரைத்தொரு பேதைக்குப் பொய்குறித்து

புரிகுழல் மங்கை யொருத்திதன்னைப் புணர்தி யவளுக்கும் மெய்யனல்லை

மருதிறுத் தாய்உன் வளர்த்தியூடே வளர்கின்ற தாலுன்றன் மாயைதானே

பதவுரை

மலர் கரு கூந்தல்

புஷ்பங்களை அணிந்துள்ள கறுத்த மயிர்

முடியையுடையவளான

ஒருத்தி தன்னை

ஒரு பெண் பிள்ளையை
கடைக் கணித்து

கடைக்கண்ணால் பார்த்துவிட்டு
ஆங்கே

அப்படியிருக்கச் செய்தே.
ஒருத்திதன் பால் மனம் மருவி வைத்து

வேறொரு பெண்பிள்ளை யிடத்தில் மனதைப் பொருந்தச் செய்து, (அவளையும் விட்டு)
மற்று ஒருத்திக்கு

வேறொரு பெண்ணிடத்தில்
உரைத்து

உனக்கு நான் அடியேன் என்று சொல்லி வைத்து
ஒரு பேதைக்கு

வேறொரு பெண்ணுக்கு
பொய் குறித்து

(ஸம்ச்லேஷத்துக்காகப்) பொய்யாகவே (ஒரு ஏகாந்தஸ்தலத்தைக்) குறிப்பிட்டு வைத்து,  ஆக இத்தனை பேரையும் ஏமாத்தி விட்டு)
புரி குழல் மங்கை     ஒருத்தி தன்னை

கடை குழன்று சுருண்ட கூந்தலையுடையவளான ஒரு இளம் பெண்ணோடு
புணர்தி

கலவி செய்யா நின்றாய்;
அவளுக்கும்

அந்தப் பெண்ணுக்கும்
மெய்யன் அல்லை

பொய்யனாயிரா நின்றாய்;
மருது இறுத்தாய்

இரட்டை மருதமரங்களை முறித்துத் தள்ளினவனே!
உன் வளர்த்தியோடே

நீ வளர்வதோடு கூடவே
உன் தன் மாயை

உன்னுடைய கள்ளங் கவடுகளும்
வளர்கின்றது

வளர்ந்து வாராநின்றன;
ஆல்

அந்தோ!.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இங்கே “மருதிறுத்தாய்! ” என விளித்ததனால், நீ பருவம் நிரம்புவதற்கு முன்னமே தீண்டினாரைக் கொன்றவனாதலால் உன்னைத் தீண்ட நான் அஞ்சா நின்றேன் காண் என்று குறிப்பிட்டவாறு மென்ப.

English Translation

You gave sidelong glances to a flower-coiffured dame; at the same time, you let your heart wander to another dame; you gave word to yet another and misled an innocent other one, then stood embracing a coiffured maiden elsewhere. O Lord who broke the Arjuna trees! As you grow, your tricks also grow with you, alas!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top