(57)

(57)

சக்கரக் கையன் தடங்கண்ணால் மலர விழித்து

ஒக்கலை மேலிருந்து உன்னையே சுட்டிக் காட்டும்காண்

தக்க தறிதியேல் சந்திரா சலம் செய்யாதே

மக்கட் பெறாத மலட னல்லையேல் வாகண்டாய்.

பதவுரை

சந்திரா

சந்திரனே!
சக்கரம்

திருவாழி ஆழ்வானை
கையன்

திருக்கையிலணிந்த கண்ணபிரான்
ஒக்கலை மேல்

(என்) இடுப்பின்மேல்
இருந்து

இருந்துகொண்டு
தட கண்ணால்

விசாலமான கண்களாலே
மலர் விழித்து

மலரப் பார்த்து
உன்னையே

உன்னையே
சுட்டிகாட்டும்

குக்ஷ்த்துக் காட்டுகின்றான்;
தக்கது

(உனக்குத்) தகுதியானதை
அறிதியேல்

அறிவாயாகில் (அன்றியும்)
மக்கள் பெறாத

பிள்ளைபெறாத
மலடன் அல்லையேல்

மலடன் அல்லையாகில்
சலம் செய்யாதே

கபடம் பண்ணாமல்
வா கண்டாய்

வந்து நில்கிடாய்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – சந்திரா! இவனை வெறுங்குழந்தையாக நினைத்து அலட்சியஞ் செய்திடாதே; இவன் சக்கரக்கையன் காண்; நீ வராமல் இருப்பாயானால் உன்மேல் சக்கரத்தைப் பிரயோகித்து உன்னைத் தண்டித்துவிடுவன் என்னும் கருத்தையடக்கி சக்கரககையன் என்கிறாள்.  “ஆழிகொண்டுன்னை யெறியும் ஐயுறவில்லை காண்” என்று மேலே ஸ்பஷ்டமாகவுங் கூறுவள்.

மக்கள் பெறாத மலடனல்லையேல் வா = குழந்தையை நீ இப்படி துடிக்க விடுவது தகுதியன்று; பிள்ளை பெறாதவர்களன்றோ பிள்ளையின் வருத்தமறியார்கள்; அப்படி நீ மலடனல்லையே; பிள்ளைகளை வருத்தப்படுத்தக்கூடாதென்பது உனக்குத் தெரியுமே என்றவாறு.

English Translation

O, Full Moon! The discus-wielding Lord with his large eyes opened wide, seated on my waist, points at you alone.  Know what is proper, and do not deceive him.  If you are not a child-less sterile, take note and come.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top