(49)

(49)

ஓதக் கடலின் ஒளிமுத்தி னாரமும்

சாதிப் பவளமும் சந்தச் சரிவளையும்

மாதக்க வென்று வருணன் விடுதந்தான்,

சோதிச் சுடர்முடியாய்  தாலேலோ! சுந்தரத் தோளனே தாலேலோ!

பதவுரை

ஓதம்

அலையெறிப்பையுடைய
கடலில்

ஸமுத்ரத்தில் (உண்டாய்)
ஒளி

ஒளியையுடைத்தாய்
முத்தின்

முத்துக்களால் கோக்கப்பட்ட
ஆரமும்

ஹாரத்தையும்
சாதி

நல்லஜாதியிலுண்டான
பவளமும்

பவழவடத்தையும்
சந்தம்

அழகுபொருந்திய
சரி

முன் கை வளைகளையும்
வளையும்

தோல்வளைகளையும்
மா தக்க என்று

விலையில் சிறந்து தகுதியாயிருந்துள்ளவை என்று
வருணன்

வருணதேவனானவன் விடுதந்தான்
சோதி சுடர்

மிக்கஜ்யோதிஸ்ஸையுடைய
முடியாய்

கிரீடத்தையணிந்த கண்ணனே!

தாலேலோ. . !

சுந்தரம் தோளனே

அழகிய திருத்தோள்களையுடைய கண்ணனே!

தாலேலோ. . !

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – வருணைதேவன் கருங்கடற் கடவுளாதலால் அக்கடலில் நின்றுந்தோன்றின முத்துக்களினாலும் பவழங்களினாலும் ஆகிய ஹாரங்களையும் முன்கைச் சரிகளையும் சங்கு வளையல்களையும் அனுப்பினான்.  அதைச்சொல்லித் தாலாட்டுகிறாள்.  அரக்கு முதலியவற்றால் செய்யப்பட்ட க்ருத்ரிமப்பவழங்களும் உண்டாதலால் அப்படியல்லாமல் உண்மையான சிறந்த பவளமென்கைக்காகச் சாதிப்பவள மெனப்பட்டது.  சோதிச்சுடர் –  ஒரு பொருட்பன்மொழிதக்க – வினைமுற்று.

English Translation

Varuna has sent a perfectly matching set of bangles and bracelets set with prized corals and a string of lustrous pearls from the deep ocean.  O, Radiant-crowned Lord, Talelo.  Lord with beautiful arms, Talelo.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top