(470)

(470)

அனந்தன்பாலும் கருடன்பாலும் ஐதுநொய்தாக வைத்துஎன்

மனந்தனுள்ளே வந்துவைகி வாழச்செய்தாய் எம்பிரான்

நினைந்துஎன்னுள் ளேநின்று நெக்குக்கண்கள் அசும்பொழுக

நினைந்திருந்தே சிரமம்தீர்ந்தேன் நேமி நெடியவனே.

பதவுரை

நேமி

திருவாழியாழ்வானையுடைய
நெடியவனே

ஸர்வாதிகனே!
எம் பிரான்

எனக்குப் பரமோபகராகனானவனே!
அனந்தன் பாலும்

திருவனந்தாழ்வானிடத்திலும்
கருடன் பாலும்

பெரிய திருவடியினிடத்திலும்
ஐதுநொய்தாக வைத்து

(அன்பை) மிகவும் அற்பமாகவைத்து
என் மனம் தன் உள்ளே

எனது ஹருதயத்தினுள்ளே
வந்து வைகி

வந்து பொருந்தி
வாழச்செய்தாய்

(என்னை) வாழ்வித்தருளினாய்;

(இப்படி வாழ்வித்த உன்னை.)

என் உள்ளே

என் நெஞ்சில்
நினைந்து நின்று

அநுஸந்தித்துக்கொண்டு
நெக்கு

(அதனால்) நெஞ்சு சிதிலமாகப் பெற்று
கண்கள் அகம்பு ஒழுக

கண்களினின்றும் நீர் பெருகும்படி
நினைத்து இருந்தே

(நீ செய்த நன்றிகளை) அநுஸந்தித்துக்கொண்டே
சிரமம் தீர்த்தேன்

இளைப்பாறப்பெற்றேன்

.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமான் தனது அந்தரங்க சிங்கார்களான நித்யஸூரியள் அனைவரிடத்தும் அன்பைக் குறைத்து, அவ்வன்பு முழுவதையும் தம்மொருவர் பக்கலில் அமைந்தருளின பரமோபகாரத்தைப் பேசுகின்றார், இப்பாட்டில் “சென்றால் குடையாம்” என்றபடி பலவகைப் பணிவிடைகளையுஞ் செய்யவல்ல திருவனந்தாழ்வானிடத்தும், உவந்நிதேறுதைக்குரிய பெரிய திருவடியினிடத்துமே அன்பு குறைந்ததென்றால், மற்றையோரிடத்துக் குறைவுற்றது. கைமுதிக நியாயத்தாற் பெறலாகுமென்க ஐது எனினும், நொய்து எனினும் அற்பமென்றே பொருள்; இங்கு ஒருபொருட் பன்மொழியாய், ‘மிகவும் அற்பமாக’ என்று பொருள்படும்.

இப்படி ‘வாழச்செய்தாய் எம்பிரான்!’ என்ற ஆழ்வாரை நோக்கி, எம்பெருமான், “ஆழ்வீர்! இன்று வாழ்ந்ததாகக் கூறுகின்ற நீர் நெடுநாளாக இவ்விருள் தருமா ஞாலத்தில் தட்டித்திரிந்து அலமந்து மிகவும் இளைத்தீரே” என்ன; அதற்கு ஆழ்வார், “ஐயனே! உன்னை இன்று நெஞ்சார நினைத்து, பிறகு ‘நெஞ்சுழியும்’ என்றபடி மருச்சை தில்யமும் பெற்று, கண்களும் நீர்மல்கப்பெற்று, பிறகு இவ்வாறாக பரிபாகஙக்ள் பிறக்கைக்கடியாக நீ செய்தருளின நன்றிகளை மநநம் பண்ணிக்கொண்டே ஸகலதாபங்களும் தவிரப்பெற்றேனாகையால், என் சிரமத்தைப்பற்றி உனக்குச் சிந்திக்கவேண்டிய கடமையில்லை” என்கிறார். பின்னடிகளில். அசும்பு – கண்ணீர்; ***- என்ற வடசொல் திரிபு ***-***- கண்ணீர்.)சிரமம் – ***- என்ற வடசொல் திரிபு. கையும் திருவாழியுமான அழகைக் கண்டபின்பும் இளைப்பாறக் கேட்கவேணுமோ என்பார் ‘நேமி நெடியவனே!’ என விளிக்கின்றார் (அ)

English Translation

Making less of your love for Ananta and Garuda, you have entered into my heart and given me a new life. My Lord, my heart melts; my eyes shed tears of joy. Contemplating you, I have ended my miseries. O Lord bearing to discus!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top