(3997)

(3997)

பெற்றினிப் போக்குவனோ உன்னை என் தனிப் பேருயிரை

உற்ற இருவினையாய் உயிராய்ப் பயனாய் அவையாய்

முற்றவிம் மூவுலகும் பெருந் தூறாய்த் தூற்றில்புக்கு

முற்றக் கரந்தொளித் தாய்.என் முதல்தனி னித்தேயோ

 

பதவுரை

உற்ற இரு வினை ஆய்

ஆத்மாவைப்பற்றின புண்ய பாப ரூப கருமங்களுக்கு நிர்வாஹகனாய்

உயிர் ஆய்

கர்ம வச்யனான ஆத்மாவுக்கு நியந்தாவாய்

பயன் அவை ஆய்

கருமபலனான ஸீக துக்கங்களைக் கொடுப்பவனாய்க் கொண்டு

இம் மூவுலகும் முற்ற பெருதூறு ஆய்

இந்த மூவுலக மெல்லாமாகிற பெரிய தூற்றை யுண்டாக்கினவனாய்

தூற்றில் புக்கு

இந்தத் தூறு தன்னுள்ளே புகுந்து

முற்ற கரந்து ஒளித்தாய்

ஒருபடியாலு மறிய வொண்ணாதபடி மறைந்து நிற்குமவனாய்

என் முதல் தனி வித்தே ஓ

எனக்கு உன்னைக் கிட்டுகைக்கு மூல ஸீக்ருதமாயிருப்பவனே!

என் தனிபேர் உயிரை உன்னை

எனக்கு அஸாதாரண தாரகனான வுன்னை

பெற்று இனி போக்குவனோ

பெற்று வைத்து இனி விடுவேனோ!

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

-மிகவும் விஸஜாதீயனாயிருந்த எனக்கு மிகவும் தாரகனான வுன்னை பெற்று வைத்து இனி விடுவேனோ? உயிரைவிட்டு உடல் தாரிக்கவற்றோ வென்கிறார். இப்பாட்டில் ‘என் தனிப் பேருயிரை” என்பது உயிரானது. உற்ற இருவினையாய்-உன்னை யொழிய வேறு சில கருமங்களை ஸ்வதந்த்ரமாக நினைத்திருந்தே னாகிலன்றோ உன்னை யொழிய வேறு சில கருமங்களை ஸ்வாந்த்ரமாக நினைத்திருந்தே கிடக்கிற புண்யபாபங்களாகிற கருமங்கள் நீயிட்ட வழக்கன்றோவென்கை. உயிராய்-கருமங்களை யஎஷ்டிப்பவர்களான சேதநா;களும் நீயிட்டவழக்கன்றோ. பயனாயவையாய்-கருமபலன் உன்னையொழிய ஸித்திக்குமென்றிருந்தேனோ வென்கை. இப்போது இவை யெல்லாஞ் சொல்லுகிறது எதற்காக வென்னில்; தம்மிடத்தில் ஒன்றும் எதிரிபார்க்க நியாயமில்லை யென்கைக்காக.

முற்றவிம் மூவுலகும் பெருந்தூறாய்-மூவுலகங்களுமாகிற இந்த ஸம்ஸாரம் புதர் போன்றது, இதை யுண்டாக்கினவனும் நீயே. தூற்றில் புக்கு முற்றக் கரந்தொளித்தாய்-இங்ஙனே புதராயிருக்கின்ற ஸம்ஸார நிலமெங்கும் வியாபித்து ஒருவருமறயாதபடி நின்றாய். என் முதல் தனிவித்தே!-எனக்கு ப்ரதமஸீக்ருத மானவனே! என்றபடி. நானாக ஒரடிவந்திலேன்; முதலே பிடித்து க்ருஷிபண்ணினவன் நீயேயன்றோ வென்றபடி. ஆக இவ்வளவு ஹேதுக்களாலே உன்னை இனிப்போக்குவனோ வென்றாராயிற்று.

 

English Translation

How will let you go, my own sweet over-soul? You are the endless karmas, their fruit and the enjoyer.  Like a huge black hole you have entered the three worlds, and hidden yourself completely!  O My first-seed!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top