(3984)
வேள்வியுள் மடுத்தலும் விரைகமழ் நறும்புகை காளங்
கள் வலம்புரி கலந்¦ தங்கும் இசைத்தனர்
ஆளுமிங்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாளொண்கண் மடந்தையர் வாழ்த் தினர் மகிழ்ந்தே
பதவுரை
|
வேள்வி உள் மடுத்தலும் |
– |
வைதிகர்கள் தம்தம் தேவ பூஜா பலன்களை ஸமரிப்பித்தவளவிலே |
|
விரை கமிழ |
– |
பரிமளம் மிக்க |
|
நறுபுகை |
– |
ஸீகந்த தூபங்களானவை |
|
எங்கும் கலந்து |
– |
எங்கும் வியாபிக்க |
|
காளங்கள் வலம் புரி |
– |
திருச்சின்னங்களையும் சங்கு களையும் |
|
இசைத்தனர் |
– |
ஊதினார்கள் |
|
வாள் ஒண் கண் மடந்தையர் |
– |
ஒளிமிக்க கண்களையுடைய தேவஸ்த்ர்கள் |
|
ஆழியான் தமர் |
– |
“திருவாழியை யேந்திய எம்பெருமாளுக்கு அடிமைப்பட்டவர்களே! |
|
வானகம் ஆண் மின்கள் என்று |
– |
இந்த ஸ்வர்க்காதிபதங்களை ஆளுங்கோள்” என்று சொல்லி |
|
மகிழ்ந்து வாழ்த்தினா |
– |
ப்ரீதியுடன் வாழ்த்தினார்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
-திவ்யாப்ஸரஸ்ஸீக்கள் மகிழ்ந்து வாழ்த்தினபடியை யருளிச்செய்கிறார். வேள்வியுள் மடுத்தலும்-கீழ்ப்பாட்டிற் சொன்ன யாகபல ஸமரிப்பணம் நடைபெற்றவளவிலே யென்றபடி. வேறே சிலர்நறுமணம் மிக்க தூபங்களையிட்டார்கள். வேறே சிலர்காளங்களையும் சங்குகளையும் ஒலிப்பித்தார்கள் காளமென்பது திருச்சின்னம்; காஹளம் காஹளீ என்;பர்வடநுற்லார். காஹன மென்ற சொல்லே காளமெனத் திரிந்தது.
ஆழியான்தமர் வானகம் ஆண்மின்கள் என்று வாளொண்கண் மடந்தையர் மகிழ்ந்து வாழ்த்தினர்-எம்பெருமானுடைய கையுந்திருவாழியுமான அழகிலே யீடுபட்டவர்களன்றோ நீங்கள்; வாருங்கள்! இவ்விடத்தை யாறுங்கள்! என்று சொல்லி திவ்யாப்ஸரஸ்ஸீக்கள் மகிழ்ந்து வாழ்த்தினர். வாளொண்கண் என்ற அடைமொழியின் கருத்தை நம்பிள்ளை விவாரித்தருளுகிறார் காண்மின்-“தேசாந்தரத்தில் நின்றும் போந்த ப்ரைஜையைத் தாய்மார் குளிரப் பார்க்குமாபோலே ஒளியையுடைய அழகிய கண்களாலே குளிர நோக்கினபடி”. (மகிழ்ந்து) என்பதனால் ஒருவருடைய நிர்ப்பந்தத்திற்காகச் செய்கிறார்களல்லர், ப்ரீதிதூண்டச் செய்கிறார்களென்பது போதரும் முடிவில் நம்பிள்ளை ஸ்ரீஸீக்தி;-“இங்கு பகவத் ஸம்பந்தமே ஹேதுவாக நீசராலே பாரிபூதனாய்ப் போந்தவன் சாரிர வியோக ஸமநந்தரத்தில் தங்களுக்கு அவ்வருகில்
திருவாய்மொழி-திவ்யார்த்ததீபிகை
லா தார் கொண்டாடும்படியிறே பெறும்பேறு.” தங்களுக்கு அவ்வருகில்லாதாரென்றது எல்லார்எம் மேம்பட்டவர்களென்றபடி.
English Translation
Incense rose with fire oblations, bugles and concehs rent the air, “Rule the sky, O Devotee!”, the Vel-eyed dames cheered lustly
