(3976)
இன்றென்னைப் பொருளாக்கித் தன்னையென் னுள்வைத் தான்
அன்றென்னைப் புறம்பொகப் புணர்த்ததென் செய்வான்?
குன்றென்னத் திகழ்மாடங்கள் சூழ்திருப் பேரான்
ஒன்றெனக் கருள்செய்ய வுணர்த்தலுற் றேனே
பதவுரை
|
என்னை இன்று பொருள் ஆக்கி |
– |
அநாதிகாலம் உபேகூஷிக்கப்படி;டிந்தவென்னை இன்று ஒரு வஸ்துவாகக் கொண்டு |
|
தன்னை என்னுள் வைத்தான் |
– |
பரம போக்யனன தன்னைமஹேயமான என்னெஞ்சிலே தானே கொண்டு வைத்தான்; |
|
(இன்று இப்படிச் செய்தவனானவிவன்) |
||
|
அன்று என்னை புறம்போக புணர்த்தது |
– |
அநாதிகாலம் நான்கை கழிந்துபோம்படி என்னை உபேகூஷித்திட்டுவைத்தது |
|
என்செய்வான் |
– |
எதற்காக? |
|
குன்று என்ன திகழ்மாகங்கள் |
– |
குன்றுகளிவை யென்னலாம்ப விளங்குகின்ற மாடங்களினால் சூழப்பட்ட |
|
திருபேரான் |
– |
திருப்பேர் நகர்க்குத் தலைவனான எம்பெருமான் |
|
ஒன்று |
– |
இத்தனைநாள்கை விட்டிருந்ததற்குத் ஹேது சொல்லுவதோ, இன்று கைக்கொண்டவதற்கு ஹேது சொல்லுவNற் இரண்டி லொன்றை |
|
எனக்கு அருள் செய்ய |
– |
எனக்கு அருளிச்செய்;ய வேணுமென்று |
|
உண்ர்த்தல் உற்றேன் |
– |
விஞ்ஞாபிக்கின்றேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
-இப்பதிகத்திற்கு இதுதான் உயிரான பாட்டு. அடியனை இன்று இவ்வளவாக விஷயீகாரிக்கைக்கும் முன்பு நெடுநாள் உபேகூஷித்திருந்ததற்கும் காரணமருளிச்செய்யவேணுமென்று தமக்குண்டான ஜிஜ்ஞாஸையை வெளியிடுகிறாராயிற்று. எம்பெருமான் தம்மைத் திருநாட்டிலே கொண்டுபோவதாக விரைகிறபடியைக் கண்டு, ‘இன்று என்னளவல்லாதபடி த்வாரிககின்ற தேவாரிர் இதற்கு முன்பு நெடுநாள்விட்டு ஆறியிருந்தபடி எங்;ஙனே?’ என்று அவன்றன்னைக் கேட்கிறார்.
கீழே இன்று விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் என்றாரே; அப்படி எம்பெருமான் விரையத்தொடங்கின நாளை இப்பாட்டில் இன்று என்கிறார்; கூவிக்கொள்ளுங்கால மின்னங்குறுகாதோ என்றும், கண்ணாளா கடல்கடைந்தாய் உனகழற்கேவரும் பாரிசு தண்ணாவாதடியேனைப் பணிகண்டாய் சாமாறே என்றும் தாம் கதறியழுத காலத்தை அன்று என்கிறார். அன்றிக்கே மயாவறமதி நலமருளினன் என்ற தம்வாயாற்பேசலாம்படி விஷயீகாரிக்கப்பெற்ற நாள் தொடங்கியுள்ள காலத்தை இன்று என்றும், அதற்கு முற்பட்ட காலத்தை அன்று என்றுஞ் சொல்லுகிறார் என்பதும் பொருந்தும்.
ஆழ்வார் எம்பெருமானை நோக்கி இப்படி கேள்வி கேட்டாரே, இதற்கு எம்பெருமான் என்ன மறுமொழி கூறினான்? என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்டாராம்; அதற்கு பட்டர் அருளிச் செய்தாராம் – அவன் பதில் சொல்லுவதற்கு என்ன இருக்கிறது? ‘இவர் தலையிலே ஒரு பழியை யேறிட்டு நெடுநாள் இழந்து கிடந்த நாம் என்ன சொல்லுவது?’ என்று வெள்கி, காலாலே தரையைக் கீறி நிற்பது தவிர வேறுண்டோ? என்று.
எம்பெருமான் பதில் சொல்லுவதாயிருந்தால் எவ்விதமாகச் சொல்லலாம்? என்று பாரிப்போம் ‘ஆழ்வீர்முன்பு உமக்கு ருசியில்லாமையாலே நாம் உபேகூஷித்திருந்தோம்; இன்று நீர் ருசிபெற்று ஸதாநுஷ்டாநமும் பணிணனீராகையாலே ஆத்ரம் செய்தோம்; என்று ஒரு பதில் சொல்லலாம்; ஆனால் அப்படி சொல்வதற்கு இங்கு விஷயமில்லை. இவர் தலையிலே ஒரு ஸாதனாநுஷ்டானம் காணாமையாலே. ஆனாலும் ஒரு பதில் சொல்லலாம்-“என்;னுடைய ப்ரவ்ருத்திக்கு விரோதியான ஸ்வப்ரவ்ருத்தியிலே நீர் இதுவரையில் ஊன்றியிருந்தீர்; அது என்னை விலக்கின படியாயிருந்தது; விலக்காத ஸமய்ம் எதிரிபார்த்திருந்தேன்; அது இப்போது கிடைத்தமையாலே ளும்மை யாதாரித்தேன்; அன்றியும், என்னைத் தவிர்நத மற்றவற்றில் ஸாதநத்வ புத்திபண்ணிப் போந்தீர் இதுகாறும்; இப்போது அது தவிர்ந்து என்னையே உபாயமாகக் கொண்டீர்; ஆதலால் ஆதாரித்தேன்” என்று சொல்லலாம். ஏன் இந்த பதிலை எம்பெருமான் சொல்லவில்லையென்னில்; இதுவொரு பதிலாகுமோ? அசட்டுத்தனமான பதில்றோவிது; சைதந்ய ப்ரயுக்தமாய் வருகிற அத்வேஷயபரியாயமான ருசியை ஸாதநமென்ன வொண்ணுமோ? உபாயத்வத்தை பேறிட்டுச் சொல்ல எப்படி முடியும்! நம்முடைய ஸ்வாதந்திரியத்தாலேயே உபேகூஷித்திருந்தோம், ஸ்வாதந்திரியத்தாலேயே ஆதாரித்தோம்; இதை ஆழ்வார் நன்கு தெரிந்துகொண்டு கேள்வி கேட்கிறாராகையாலே இவர்க்கு நாம் ஒரு பதிலும் சொல்லிப் பிழைக்க முடியாதென்று பேசாதே கிடந்தான்.
ஆசாரிய ஹ்ருதயத்தில் இரண்டாவது ப்ரகரணத்ததில் (102) “இடகிலேன் நோன்பறிவிலேன் கிற்பன் கீழ்நாள்களென்கையாலே ஸாதநத்ரய் பூர்வாப்யாஸஜ மல்ல” என்று தொடங்கி (113) “வரலாற்றில்லை வெறிதே யென்றறுதியிட்டபின் வாழ்முதலென்கிற ஸூக்ருத மொழியக் கற்பிபக்கலாவதில்லை” என்கிற சூர்ணையளவும்; மேலே நானகாம ப்ரகரணத்தில் (228) “இன்று அஹேதுகமாக ஆதாரித்த நீ அநாத்யாநாதரஹேது சொல்லென்று மடியைப் பிடிக்க …… இதுவும் நிருத்தர மென்று கவிழ்ந்து நிற்க” என்றருளிச் செய்ததும் மணவாள்மாமுன்கிளின் வியாக்கியானத்தோடும் நம்முடைய விசேஷ விவரணங்களோடும் இங்கே அநுஸந்தேயம். நாஸெவ புருஷகாரேண நாசாப்யந்யேந ஹேதுநா கேவலம் ஸ்வேச்சயைவாஹம் பிரேNகூஷ ஞ்சித் கதாச்ந என்றவனிறே அவன்தான்.
English Translation
The Lord residing in Tirupper with mountain-like mansions, today has made a person of me, sitting in my heart, why had he left me to wander so long?, -I begin to wonder, pray let him answer
