(3939)

(3939)

நாடீர் நாள்தோறும் வாடா மலர்கொண்டு

பாடீர் அவன்நாமம் வீடே பெறலாமே.

பதவுரை

நாள்தோறும்

தினந்தோறும்
அவன் நாமம்

அப்பெருமானது திருநாமங்களை
வாடா மலர்கொண்டு      பாடீர்            பாடுங்கள் (இங்ஙனே செய்தக்கால்)

செவ்வி மாறாத பூக்களைக் கொண்டு
நாடீர்            பணியுங்கள்;            வீடே பெறலாம்

மோஷமே பெறலாகும்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

****- ஸ்வரூபாநுரூபமான காரியத்தைச் செய்யவே ஸ்வரூபாநுரூபமான புருஷார்த்தத்தைப் பெறலாமென்கிறார்தில்.  வாடாமலர்கொண்டு நாடோறும் நாடீர் – *மார்வமென்பதோர் கோயிலமைத்து மாதவனென்எந் தெய்வத்தைநாட்டி, ஆர்வமென்பதோர் பூவிடவல்லார்க்கு*  என்று பெரியாழ்வார் ஆர்வத்தைப் பூவாக அருளிச்செய்திருக்கையாலே இங்கு வாடாமலரென்று ஆர்வத்தைச் சொன்னதாகக் கொள்ளலாம்.  ஆத்மபுஷ்பத்தைச் சொன்னதாகவுங் கொள்ளலாம்.  *அஹிம்ஸா ப்ரதமம் புஷ்பம்* என்று தொடங்கி *ஸத்யமஷ்;டவிதம் புஷ்பம் விஷ்ணோ: ப்ரீதிகரம் பவேத்* என்பதளவாகச் சொன்ன அஷ்டவித புஷ்பங்களை ஆழ்வார்கள் *கந்தமாமல ரெட்டுமிட்டு* என்றும் *இனமலரெட்டுமிட்டு* என்றும் அருளிச் செய்வதுண்டாகையாலே இங்கு அவற்றையே வாடாமலராகச் சொல்லிற்றாகவுங் கொள்ளலாம்.  *செண்மக மல்லிகையோடு செங்கழுநீர்ருவாட்சி முதலிய செவ்விப் பூக்களைக் கொண்டு என்கிற பொருள் உள்ளதே.  நாடீர் நாடோறும் என்பதற்கு “பசித்தபோதெல்லா முண்ணுமாபோலே” என்று ஈடு.

“அவன்னாமம் சொல்லீர்” என்னாதே ‘பாடீர்’ என்கையாலே *ஏதத் ஸாம காயத் ஆஸ்தே* என்கிறபடியே மேலே பாடுகையாகிற புருஷார்த்தம் இங்குமாகக் கடவதென்று தோற்றுவிக்கப்படுகின்றதென்க.  இப்பாட்டில், மனமொழி மெய்களாகிற முக்கரணங்களுக்கும் காரியமிடப்பட்டது;  நாடீரென்றது – மாநஸவ்யாபாரம்; மலர்கொண்டென்றது காயிகவ்யாபாரம்; பாடீர் என்றது வாசிகவ்யாபாரம்.

English Translation

Worship him every day, with fresh flowes and sing his name, liberation is here

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top