(3934)
பற்றென்று பற்றிப் பரம பரமபரனை
மற்றிண்டோள் மாலை வழுதி வளநாடன்
சொற்றொடையந் தாதியோ ராயிரத்து ளிப்பத்தும்
கற்றார்க்கோர் பற்றாகும் கண்ணன் கழலிணையே.
பதவுரை
|
பரம பரம்பரனை |
– |
பராத்பரனையும் |
|
தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் |
– |
அந்தாதித் தொடையான ஆயிரத்தினுள் |
|
மல் திண் தோள் |
– |
மிடுக்குப் பொருந்திய திருத்தோள்களை யுடையனாயிமிருக்கிற |
|
இப் பத்தும் கற்றார்க்கு |
– |
இப்பதிகத்தைப் பயின்றவர்களுக்கு |
|
மாலை |
– |
ஸர்வேச்வரனை |
|
பற்று என்று பற்றி |
– |
தமக்குப் புகலாக வுறுதி யிட்டு |
|
கண்ணன் கழல் இணை ஓர் பற்று |
– |
கண்ணனது உபயபாதங்கள் |
|
வழுதி வளநாடன் சொல் |
– |
ஆழ்வார் அருளிச்செய்த |
|
ஆகும் |
– |
ஒப்பற்ற ப்ராப்யமாகும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
**** – இத் திருவாய்மொழியைக் கற்றார்க்கு எம்பெருமான் திருவடிகள் ஸுலபமாமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். பரமபரம்பர னென்பதனால் ஸர்வேச்வரத்வஞ் சொல்லுகிறது; மல்திண்டோன்மா லென்பதனால் விரோதிகளைப் போக்குகைக் கீடான மிடுக்குடைமையும் அடியார் திறத்து வியாமோஹமுடைமையும் சொல்லுகிறது.
English Translation
This decad of the thousand songs by Valudi-land’s Kurugur Satakopan on the Lord of the celestials who has strong wrestling shoulders, Offers shelter of his feet to those who can sing it
