(3882)

(3882)

தொண்டர்நுந்தம் துயர்போகநீரேகமாய்

விண்டுவாடாமலரிட்டு நீரிறைஞ்சுமின்

வண்டுபாடும்பொழில் சூழ் திருக்கண்ணபுரத்

தண்டவாணன் அமரர்பெருமானையே.

 

பதவுரை

தொண்டர்

தொண்டர்களே

வண்டு பாடும் பொழிழ் சூழ்

வண்டுகள் பாடுமிடமான் சோலைகளாலே சூழப்பட்ட

திரு கண்ணபுரத்து

திருக் கண்ணபுரத்தி வெழுந்தருளியிருக்கிற

அண்டம் வாணன் அமரர் பெருமானை

அகிலாண்ட கோடி ப்ரஹ மாண்டநாயகனான எம்பெருமானை

தும் தம் துயர் போக

உங்களுடைய துக்கம் தொலையும்படி

நீர் ஏகம் ஆய்

நீங்கள் அநந்ய ப்ரயோஜநர்களாய்

விண்டு வாடா மலர் இட்டு

மலர்ந்து வாடாத (அப்போதலர்ந்த) பூக்களைப் பணிமாறி

நீர் இறைஞ்சுமீன்

நீங்களே தொழுங்கள்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– திருக்கண்ணபுரத்திலே நின்றருளினவன் உபயவிபூதி நாதனாயிற்று;  தொண்டர்களே உங்கள் துக்கங்கெட அநந்யப்ரயோஜநராய்க் கொண்டு ஆச்ரயியுங்கோளென்கிறார் தொண்டர்=இது அண்மைவிளி; தொண்டர்களே! என்றபடி.  இளைய பெருமாளைப்போலே ஸகலவித கைங்கரியங்களையுஞ் செய்யப் பாரித்திருக்குமலர்களே யென்கை. நுந்தம் துயர்போக=துயர் ல்லார்க்கும் ஒரே வகையாயிராது;  “ஸம்ஸாரிகளுக்கு விரோதி சத்ருபீடாதிகள்; முமுக்ஷீக்களுக்கு விரோதி தேஹஸம்பந்தம்; முக்தர்க்கும் நித்யர்க்கும் விரோதி கைங்கர்யஹானி ” என்று முமுக்ஷீப்படியிலருளிச் செய்த கட்டளையிலே தந்தாமுடைய விரோதிகள் தொலையும்படியாக வென்கை.

நீர் ஏகமாய்=நீங்களெல்லாரும் லகீபவித்தவர்களாய்க் கொண்டு; (அல்லது) நீங்கள் பலவகைப் பலன்களைக் கணிசியாதே பகவத் கைங்கரியமொன்றையே கணிசித்தவர்களாய்க் கொண்டு என்றுமாம்.  விண்டுவாடாமலரிட்டு இறைஞ்சுமின்=செவ்விப் பூவைக் கொண்டு ஆச்சயியுங்கோள்.  நீர் என்பது முதலடியிலும் இரண்டாமடியிலுமுள்ளது;  இரட்டிப்பு–உங்கள்  ஸ்வரூபத்தை நோக்க வேணுமென்று ஞாபம் செய்கிறபடி.

வண்டுபாடும் போழில்சூழ் = வண்டுகளைப் போலே ஸாரக்ராஹிகளான வர்த்திக்கிற தேசமென்றபடி. அண்டவாணன் அமரர்பெருமான்=உபயவிபூதிநாதனென்கிறது.  அண்டவாணன் என்பதனால் லீலாவிபூதி நிர்வாஹகத்வம் சொல்லுகிறது.

 

English Translation

O Devotees, gather and offer worship with fresh unfading flowers.  The Lord resides in Tirukkannapuram with bee-humming groves.  He shall end your despairs individually

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top