(3859)
கொடியேரிடைக் கோகனத்தவள்கேள்வன்
வடிவேல்தடங்கண் மடப்பின்னைமணாளன்
நெடியானுறைசோலைகள் சூழ் திருநாவாய்
அடியேனணுகப்பெறுநாள் எவைகொவோ.
பதவுரை
|
கொடி ஏர் இடை |
– |
கொடிபோலாகிய இடையையுடையனாய் |
|
கோகனகத்தவன் |
– |
தாமரையாளான பிராட்டிக்கு |
|
கேள்வன் |
– |
வல்லபனாய் |
|
வடிவேல் தட கண் மட பின்னை மணாளன் |
– |
உரிய வேல் போன்ற பெரிய எண்களை யுடைய அழகிய கப்பின்னைப் பிராட்டிக்கு மணவாளனாய் |
|
நெடியான் |
– |
மஹா புருஷனானவன் |
|
உறை |
– |
நித்யவாஸம்பண்ணுகிற |
|
சோலைகள் சூழ் திருநாவாய் |
– |
சோலைகளாலேசூழப்பட்ட திருநாவாயை |
|
அடியேன் அணுக பெறும் நாள் எவை கொல் |
– |
அடியேன் கிட்டப்பெறுவது என்னைக்கோ |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***– பெரிய பிராட்டியாரோடும் நப்பின்னைப் பிராட்டியாரோடுங் கூட அவன் எழுந்தருளியிருக்கிற திருநாவாயிலே போய்ப்புகுவது என்றைக்கோ வென்கிறார். கொடி போன்றழகிய இடையை யுடையளாய், தாமரைப் பூவிற் பரிமளம் உபாதானமாகப் பிறந்தவனான பிராட்டிக்கு வல்லபன்; கூரிய வேல் போன்றழகிய கண்ணையுடையளான நப்பிள்ளைப் பிராட்டிக்கு மணவாளன். இவ்விரண்டு விசேஷணங்களின் கருத்து–புருஷகாரம் செய்து சேர்ப்பிக்கவல்லவர்கள் அருகேயிருக்கச் செய்தேயும் நான் இழக்கலாமோ என்பதாம்.
English Translation
The Lord in Tirunavai is spouse of lotus-dame Lakshmi, and Vel-eyed slender Nappinnai. Oh! When will I attain him?
