(3735)

(3735)

அற்புதன் நாரா யணனரி வாமனன்,

நிற்பது மேவி யிருப்பதென் னெஞ்சகம்,

நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர்,

கற்பகச் சோலைத் திருக்கடித் தானமே.

 

பதவுரை

அற்புதன்

அத்புத சேஷ்டிதனாய்

நாராயணன்

நாராயணனாய்

அரி வாமனன்

ஹரியாய் வாமனனான எம்பெருமான்

மேவி இருப்பது என் நெஞ்சகம்

பொருந்தியிருப்பது என்னெஞ்சினுள்ளே,

நிற்பது

அதற்காகவந்து நிற்பது (எவ்விடத்திலென்னில்)

நல் புகழ் வேதியர்

புகழ்மிக்க வைதிகருடைய

நால் மறை

நான்கு வேதங்களும்

நின்று அதிர்

நிலைநின்று முழங்கும்படியாய்

கற்பகம் சோலை

கற்பகம் போன்ற மரங்கள் நிறைந்ததான

திருக்கடித்தானம்

திருக்கடித்தானத்திலே

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆழ்வார்தம்மைப் பெறுமளவும் எம்பெருமான் திருக்கடித்தானத்திலே நின்றருளினான், இவர்தம்மைப் பெற்று ஸம்ச்லேஷித்த பிறகு நிற்பதுமிருப்பதும் இவர்தம் நெஞ்சிலேயாயிற்று என்கிறது இப்பாட்டு.

அற்புதன் நாராயணன். அரி வாமணன் நிற்பது – (எங்கேயென்றால்) நற்புகழ்வேதியர் நான்மறை நின்றதிர் கற்பகன் சோலை திருக்கடித்தானமே, (அவன்றான்) மேவியிருப்பது (எங்கேயென்றால்) என்னெஞ்சகம் –என்றிங்ஙனே ஒரு அந்வயக்ரமம். நற்புகழ்வேதியர் நான்மறை நின்றதிர் கற்பகச் சோலைத் திருக்கடித்தானத்து அற்புதன். நாராயணன் அரிவாமனன் நிற்பதும் மேவியிருப்பதும் என்னெஞ்சகம் – என்றிங்ஙனே மற்றோரந்வயக்ரமம். மூன்றாவதான வொரு யோஜனையுமுண்டு, அற்புதன் நாராயணன் அரி வாமனன் நிற்பதும் மேவியிருப்பதும் என்னெஞ்சகத்திலும் திருக்கடித்தானத்திலும் – என்று.

 

English Translation

The wonder-Lord Narayana-Hari, is Vamana residing in my heart.  The sound of Vedic chants reverberates through the groves of kalipa trees in Tirukkadittanam

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top