(3514)
மாண்பமை கோலத்தெம் மாயக் குறளற்கு,
சேண்சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு,
காண்பெருந் தோற்றத்தெங் காகுத்த நம்பிக்கு,என்
பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே.
பதவுரை
| மாண்பு அமை கோலத்து |
– |
அழகமைந்த வடிவையுடையனான |
| எம் மாயம் குறளற்கு |
– |
எம்மையீடுபடுத்திக்கொள்ளும் மாயவாமனமூர்த்தியும் |
| சேண் சுடர் குன்று அன்ன |
– |
உயர்ந்த சோதிமயமான குன்று போன்ற |
| செம் சுடர் மூர்த்திக்கு |
– |
செவ்விய சுடரையுடைய வடிவு கொண்டவனும் |
| காண் பெருதோற்றத்து |
– |
அனைத்துலகும் காணப்பர்வத்தையுடைய |
| என் காகுத்தன் நம்பிக்கு |
– |
இராமபிரானுமான பெருமான் விஷயத்திலீடுபட்டதனால் |
| என் பூண் புனைமென் முலை |
– |
ஆபரணங்களையணிந்தமெல்லிய முலைகளை யுடையளான என்மகள். |
| தோற்றது பொற்பு |
– |
இழந்தது அழகாம் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (மாண்பமை கோலத்து) இப்பாட்டில் என்மகள் அழகிழந்தாளென்கிறாள். தன்னழகாலே அவனைவசப்படுத்திக் கொள்ள பிறந்தவிவள் அவனழகிலே யீடுபட்டுத் தன்னழகை யிழந்தாளென்று வருந்துகிறாள்.
மாண்பமை கோலத் தெம்மாயக்குறளற்கு – * மன்னன் தன் தேவிமார் கண்டு மகிழ வெய்த முன்னிவ்வுலகினை முற்றுமளந்தவன் * என்கிறபடியே மாவிலன் வேள்வியிலே குறட்பிரமசாரியா யெழுந்தருளின அழகை அந்த மாவலியின் தேவிமார் கண்டு ஹா! ஹா! இப்படியும் ஓரழகுண்டோ வென்று வியந்து ‘இச்சிறுபிள்ளை எது கேட்டாலும், தானம் பண்ணியாக வேணும்‘ என்று கூறினார்களாம். * க்ருத்திம் க்ருஷ்ணம்ருகஸ்ய லக்ஷஸிவஹந் ஆஷாடமம்ஸேப்பயந், ஸ்வாத்யாயஸ்வரஸம்பதா பரிஷதாம் ப்ரீதிம் ஸமுத்பாதயந் யாச்ஞாயை பலியஜ்ஞவாடநிகடம் ப்ராப்தோ வடு, பாதுவ * என்னும்படியான அவ்வடிநெஞ்சு பறிகொடுக்கமாட்டாதே ஸ்வராஜ்யம் வேணுமென்றிவ்வளவே ஆசை கொண்டு வந்த இந்திரனுக்காக இத்தனைகாரியம் செய்பவன் என்னை இப்பாடுபடுத்துகிறானேயென்று தளர்கின்றாளென்கிறாள்.
English Translation
My soft-breasted jewel-girl has lost her radiance, -to the Lord who came as beautiful groom, the Kakutsha Lord who looks a perfect hero, and rises tall like a dark radiant mountain.
