(3483)

(3483)

காண்மின்க ளுலகீர் என்று கண்முகப் பேநிமிர்ந்த,

தாளிணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன,

ஆணையா யிரத்துத்திரு விண்ணகர்ப்பத் தும்வல்லர்,

கோணையின்றி விண்ணோர்க் கொன்றுமாவர்குரவர்களே.

பதவுரை

உலகீர்

உலகத்திலுள்வர்களே!
கரண்மின்கள் என்று

இந்த விநோதத்தைக் காணுங்கோள் என்று (சொல்பவன் போன்று)
கண் முகப்பே நிமிர்ந்த

கண்ணெதிரே ஓங்கி வளர்ந்த
தான் இணையன் தன்னை

உபயபாதங்களை யுடையவனான எம்பெருமான் விஷயமாக
குருகூர் சடகோபன் சொன்ன

நம்மாழ்வார் அருளிச் செய்த
ஆணை ஆயிரத்து

பகவதாஜ்ஞா ரூபமான ஆயிரத்தினுள்ளும்
திரு விண்ணகர் பத்தும் வல்லார்

திருவிண்ணகர் விஷயமான இப்பதிகத்தை ஓத வல்லவர்கள்
விண்ணோர்க்கு

நிர்யஸூரிகளுக்கு
கோணை இன்றி மிறுக்கு இல்லாமல்
என்றும் குரவர்கள் ஆவர்

எப்போதும் கௌரவிக்கத்தகுந்தவராவர்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (காண்மின்கள்) இத் திருவாய்மொழியை அதிகரிக்கவல்லவர்கள் நித்யஸூரிகளுக்கும் கௌரவிக்கத் தகுந்தவராவர் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். இப் பதிகமானது * காண்மின்களாலகீரென்று கண்முகப்பே நிமிர்ந்த தாளிணையன்தன்னைக் குறித்து அருளிச்செய்ததாகத் தகும், ஏனெனில், மாவலியை வடிவழகாலும் பேச்சில் இனிமையாலும் மயக்கினதுபோல இருக்கும் மயக்கித் தன் காரியத்தை ஸாதித்துக் கொண்டதனால்.

ஆணையாயிரம் – ••••  ஸ்ம்ஸ்க்ருத வேதமானது எப்படி பகவதாஜ்ஞாரூபமமோ அப்படியே இத் தமிழ்வேதமும் என்க.

விண்ணோர்க்கு என்றும் குரவர்களாவர் – இத் திருவாய்மொழியை ஓதுமவர்கள் நித்ய ஸூரிகளுக்குக் குரவர்களாகையாவது என்னென்னில், – * பாவியேனைப் பல நீ காட்டிப்படுப்பாயோ என்னும்படியான இருள்தருமாஞலத்தில் இருந்துகொண்டே இவர்கள் இப்படி பகவத் குணாநுபவம் பண்ணப் பெறுகின்றார்களே! இதுவன்றோ ஆச்சரியம்! நாம் * நலமந்தமில்லை தோர்நாட்டிலே யிருந்துக்கொண்டு குணுநுபவம் பண்ணுவதில் என்ன விசேஷம்? நம்மிற்காட்டில் இவர்களேயன்றோ சீரியர்கள்! என்று கொண்டாடப்பெறுதலாம். இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி – “ஸம்ஸாரத்தேயிந்துவைத்தே நம்படி ஒருவனுக்கு உண்டாவதே! என்று (நித்யஸூரிகள்) கொண்டாடியிருப்பர்கள்.“

English Translation

This decad of the thousand songs, by kurugur Satakopan addresses the Lord of Tiru-vinnagar who grew before our eyes when he came begging as a lad and said, “Behold, O Ball”. Those who can sing it with mastery will become Gurus to the gods.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top