(3433)
நன்னலத் தோழிமீர்காள். நல்லவந்தணர் வேள்விப்புகை,
மைந்நலங் கொண்டுயர்விண் மறைக்கும்தண் திருவல்லவாழ்,
கன்னலங் கட்டிதன்னைக் கனியையின் னமுதந்தன்னை,
என்னலங் கொள்சுடரை என்றுகொல்கண்கள் காண்பதுவே?
பதவுரை
|
நல் நலம் தோழியீர்காள் |
– |
சிறந்த நேசமுள்ள தோழிகளே! |
|
நல்ல அந்தணர் வேள்ளி புகை |
– |
வைதிக ப்ரஹ்மணர்கள் செய்யும் யாகங்களிலுண்டான புகை |
|
மை நலம் கொண்டு |
– |
ஸமயீனுடைய நல்ல நிறத்தைக்கொண்டு |
|
உயர் விண் மறைக்கும் |
– |
உயர்ந்த ஆகாசத்தை மறைக்குமிடமான |
|
தண் திருவல்லவாழ் |
– |
குளிர்ந்த திருவல்லவாழிலே எழுந்தருளியிருப்பவனும் |
|
கன்னல் அம்கட்டி தன்னை |
– |
கோதற்ற கன்னற்கட்டி போன்றவனும் |
|
கனியை |
– |
பரிபக்குவமான பழம்போன்றவனும் |
|
இன் அமுதம் தன்னை |
– |
இனிய அமுதமாயிருப்பவனும் |
|
என் நலம் கோள் |
– |
என்னுடைய ஸர்வல்லத்தையும் கொள்ளை கொண்டவனும் |
|
சுடரை |
– |
(அத்தாலே) ஒளிபெற்று விளங்குபவனுமான எம்பெருமானை |
|
கண்கள்காண்பது என்று சொல் |
– |
எனது கண்கள் காணப்பெறுவது எந்நாளோ? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (நன்னலத் தோழியீர்காள்.) தோழிகளே! உங்கள் குணங்கண்டன்றோ நான் உங்களோடு பழகியிருப்பது; நீங்கள் நன்னல தோழிகளல்வீரோ? தாய்மார் போலவே நீங்களும் எனக்குப் பகையாளிகளாக இருந்திகோலாகில் உங்களுக்குத் தோழிமாரென்னும் பெயர் அடுக்குமோ? திருவல்லவாழில் நல்லவந்தணர்கள் பகவத்ஸமாராதனமாக அனுஷ்ட்டிக்கும் வேள்விகளில் தோன்றும் புகையானது ஆகாசப்பரப்பெங்கும் பரவியிருந்து என்னை யீர்க்கின்றது; இது ஒருபுறமிருக்க, அத்தலத்தெம்பெருமானடைய அளவுகடந்த யோக்யதையோ என்னை ஆத்மாபஹாரம் பண்ணாநின்றது; அந்தத் திருமூர்த்தியைக் கண்ணால் காணப்பெற்றால் போதுமென்றிருக்கிற வெனக்கு அது என்னைக்குக் கைகூடும்? சொல்லுங்கோளென்கிறாள்
English Translation
O Good-natured sakhis! The smoke from the good Vedic seers’ sacrifices clouds the sky in Tiruvallaval, Our Lord, -that sweet ambrosia, that fruit, that sugar-candy, -has stolen my well-being. Alas! When will my eyes see his radiant form?
