(3387)

(3387)

நின்றிடும் திசைக்கும் நையுமென்று அன்னைய ரும்முனிதிர்,

குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின்,

வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும்சங்கமும்,

நின்று தோன்றிக் கண்ணுள்நீங்கா நெஞ்சுள்ளும் நீங்காவே.

 

பதவுரை

அன்னையரும்

தாய்மாரான நீங்களும் (என்னைப்பற்றி)

நின்றிடும் என்று

இப்பெண் ஸ்தப்தையாய் நிற்கின்றாளென்று சொல்லியும்

திசைக்கும் என்று

இப்பெண் அறிவழிந்து கிடக்கிறாளென்று சொல்லியும்

நையும் என்று

இப்பெண் நைநின்றாளென்று சொல்லியும்

முனிதிர்

வெறுத்துரைக்கின்றீர்கள்;

குன்றம் மாடம்

குன்றம்போன்ற மாடங்கணிந்த

திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்-;

வென்றி வில்லும்

ஜயசீலமான சார்ங்கமும்

தண்டும்

லௌமோதகியென்கிற கதையும்

வாளும்

நந்தாவாளும்

சக்கரமும் சங்கும்

திருவாழி திருச்சங்குகளும்

நின்று

நிரந்தரமாக நின்று

கண்ணுள் தோன்றி

என் கண்ணுள்ளே காணப்பட்டு

நீங்கா

நீங்குகின்றனவில்லை;

நெஞ்சுள்ளும்

நெஞ்சினுள்ளும்

நீங்கா

நீங்குகின்றனவில்லை.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (நின்றிடுந் திசைக்கும்.) நம்பியழகை நினைத்துச் சற்றுப்போது ஸ்தம்பித்து நிற்பது, பின்னை அறிவுகெட்டு அசேதநவஸ்துபோலே நிற்பது, உருகி நிற்பது இப்படியான நிலைமைகளைத் தலைமகள் அடைந்துவாரா நிற்க. தாய்மார் இதைச் சொல்லிச் சொல்லிப் பழிதூற்றத் தொடங்கினார்கள்; அதற்குத் தலைமகளுரைக்கின்றாள்; நான் ஒரு ஸ்யாபாராக்ஷமையன்றியே ஸ்தப்தையாய் நிற்பது வாஸ்தவம்; அறிவழிந்து நிற்பதும் வாஸ்தவம்; நைந்து கிடப்பதும் வாஸ்தவம்; இதற்காக நீங்கள் சீறுகைக்கு என்ன ப்ரஸக்தியுண்டு? குன்றம்போல் மணிமாடநீடு திருக்குறுங்குடி நம்பியை நான் ஸேவித்தது போல நீங்களும் ஸேவிக்கப்பெற்றாலன்றோ தெரியும். -***-வ்ருக்ஷே வ்ருக்ஷேச பச்யாமி சீரக்ருஷ்ணாஜிநாம்பரம் என்ற மாரிசனுடைய நிலைமையன்றோ எனக்குமாயிற்று. எம்பெருமானுடைய பஞ்சாயுதங்களேயன்றோ என்னைச் சூழ்ந்து கிடக்கின்றன. இந்த நிலைமை உங்களுக்கு உண்டானால் நீங்களும் நின்றிடுவீர், திசைப்பீர், ஸாவீர்; வீணாக என்னை எதுக்குப் பொடிகிறீர்கள்? என்றாளாயிற்று.

 

English Translation

Mother, you blame me saying, “She stands, she falters, she swoons”, Ever since I saw the Lord in fall-mansioned Tirukkurungudi, his victorious bow, mace, dagger, discus and conch appear before me everywhere, never leaving my eyes and heart.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top