(3375)
ஆவிகாப் பாரினியார்? ஆழ்கடல்மண் விண்மூடி,
மாவிகார மாயோர் வல்லிரவாய் நீண்டதால்,
காவிசேர் வண்ணனென் கண்ணனும் வாரானால்,
பாவியேன் நெஞ்சமே! நீயும்பாங் கல்லையே?
பதவுரை
|
ஆழ் கடல் |
– |
ஆழ்ந்த கடலையும் |
|
மண் |
– |
பூமியையும் |
|
விண் |
– |
ஆகாசத்தையும் |
|
மூடி |
– |
மறைத்து (இவ்வளவோடும் நில்லாமல் ஸகலலோகங்களையும் கபளீகரிக்கும்படி) |
|
மா வீசாரம் ஆய் |
– |
பெரிய விகாரத்தையுடைந்தாய்கொண்டு |
|
வல் |
– |
வலிதான |
|
ஓர் இரவு ஆய் |
– |
ஒரே ராத்திரியாய் |
|
நீண்டது |
– |
நெடுகிச் செல்லா நின்றது; |
|
ஆல் |
– |
அந்தோ! |
|
காவி சேர் கண்ணன் |
– |
நெய்தல் பூப்போன்ற நிறத்தையுடையனான |
|
என் கண்ணனும் |
– |
எனக்குத் தஞ்சமான கண்ணபிரானும் |
|
வாராவி |
– |
வந்து முகங்காட்டுகின்றிலன் |
|
பாவியேன் |
– |
பாவியான என்னுடைய |
|
நெஞ்சமே |
– |
மனமே! |
|
நீயும் |
– |
நீ தானும் |
|
பாங்கு அல்லை |
– |
அணுகூலமாக இருக்கிறாயில்லை. |
|
இனி |
– |
இப்படியான பின்பு |
|
ஆவி காப்பார் |
– |
பிராணனை ரக்ஷித்துத் தருவார் |
|
ஆர் |
– |
யாவர்? (ஒருவருமில்லை.) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (ஆலிகாப்பார்) இந்நிலைமையிலே கண்ணபிரானும் வந்து உதவுகின்றிலனே! என்று இன்னாதாகிறான். ஆய்ச்சியரோடு குரவைகோத்தவன்று அந்தரஸம் ஸாத்மிக்கைக்காக நெடும்போது மறைந்து நின்று அவர்களுக்கு மிகவும் அலமாப்பை விளைத்து, பிள்ளை *** – தாஸாம் ஆவிரபூத்சௌரி: ஸ்மயமாநமுகாம்புஜ: பீதாம்பரதா: ஸ்ரக்வீ ஸாக்ஷார் மந்மதமந்மத: என்கிறபடியே புன்முறுவல் காட்டிவந்து புகுந்துநின்றாற்போலே நமக்கும் வந்து முகங்காட்டுவன் என்றிருந்தால் போதும்; வரவில்லையே யென்ற கதறுகின்றாள்.
இனி ஆலிகாப்பார் ஆழ் = *குளிரருவிவேங்கடத்து என் கோவிந்தன் குணம்பாடி, அளியத்த மேகங்காள்! ஆவிகாத்திருப்பேனே * என்று குணாஸந்தானம் பண்ணி ஆத்மநாரணம் பண்ணுவதென்று ஒன்றுண்டு; உசாத்துணையில்லாமையாலே அதற்கும் வழியில்லையாயிற்று. *காக்குமியல்வினன் கண்ணபெருமான் * என்று காப்பதே தொழிலான கண்ணபிரானும் உபேஷித்தான்; ஆகையாலே இனி ஆவிகாப்பாது எங்ஙனே?
(ஆழ்கடல் இத்யாதி.) கடலும் பூமியும் ஆகாசமும் எதுவும் தெரியாதபடி எல்லாவற்றையும் ஒன்றாக மறைத்துக் காளராத்திரியே நீண்டவளராநின்றது.
மாலீகாரமாய் என்றவிடத்து ஈட்டு ஸ்ரீஸூக்தி;- “பிள்ளையும்- அவ்வளவில் பர்யவஸிப்பதாயிருக்கிறதில்லை; மஹாவிகாரத்தை யுடைத்தாய் நித்யவிபூதியையும் கணிசிக்கிறாப்போலே யிரா நின்றது. ஸர்வரூப்யம் காட்டின ஸர்வசக்தி செய்வதெல்லாம் செய்யாநின்றது.”
ஓர் வல்லிரவாய் நீண்டது = இருளுக்கும் இரவுக்கும் வாசி தெரியவில்லைபோலும்; இரண்டும் பர்யாய மென்றிருக்கிறாள்.
காவிசேர்வண்ணன் என் கண்ணனும்வாரானால் = *இந்தீவரதளச்யாமம் என்னும்படியான வடிவழகைக் காட்டுமளவே போதுமே; அது காட்டவும் வருகின்றிலன். வடமதுரையிலே வந்து தோன்றி உடனே மறைந்தாப்போலே மறைந்தானாகிலுமாம்; வருகைதானே அரிதாயிரா நின்றதே!
பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங்கல்லையே = இந்நிலைமையிலே நெஞ்சாவது ஸ்வாதீனமாக இருக்குமாகில் மறந்து பிழைக்கலாம். வேறு சிந்தனைகளைச் செய்து தரிக்கலாம்; அதற்கும் யோக்யதை இல்லாதபடி. “என்றெஞ்சினாருமங்கே யொழிந்தார்” என்கிறபடியே அத்தலைபற்றி இத்தலையை வெறுத்தொழிந்ததேயென்கிறாள்.
English Translation
A ghastly pall engulfs the Earth, sea and sky, stretching into one sinister night. My golden hued Krishna does not come, alas! O sinful heart, you too are not with me; who can save me now?
