(319)

(319)

அல்லியம்பூ மலர்க்கோதாய் அடிபணிந்தேன் விண்ணப்பம்

சொல்லுகேன் கேட்டருளாய் துணைமலர்க்கண் மடமானே

எல்லியம்போ தினிதிருத்தல் இருந்ததோ ரிடவகையில்

மல்லிகைமா மாலைகொண்டுஅங்கு ஆர்த்ததும்ஓ ரடையாளம்.

பதவுரை

அல்லி

அகவிதழ்களையுடைய
அம் பூ

அழகிய பூக்களால் தொடுக்கப்பட்ட

மலர்க்கோதாய் பூமாலை போன்றவளே!

அடி பணிந்தேன்

(உமது) திருவடிகளில் வணங்கிய நான்
விண்ணப்பம்

விஜ்ஞாபநமொன்றை
சொல்லு கேன்

(உம்மிடத்தில்) சொல்லுவேன்;
துணை மலர் கண்

ஒன்றோடொன்று ஒத்துத் தாமரை மலர்போன்ற கண்களையும்
மடம்

மடப்பத்தையுமுடைய
மானே

மான்போன்றவளே!
கேட்டருளாய்

(அதைத்) திருச்செவி சாத்தவேணும்;
அம் எல்லி போது

அழகிய இராத்திரி வேளையில்
இனிது இருத்தல்

இனிமையான இருப்பாக
இருந்தது

இருந்ததான
ஒர் இடம் வகையில்

ஓரிடத்தில்
மல்லிகை

மல்லிகைப் பூவினால் தொடக்கப்பட்ட
மா மாலை கொண்டு

சிறந்த மாலையினால்
ஆர்த்ததும்

(நீர் இராமபிரானைக்) கட்டியதும்

ஓர் அடையாளம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இதனால் அயோத்தியிலிருந்த காலத்தில் பிராட்டியும் பெருமாளும் ராத்ரி வேளையில் ஏகாந்தமான இடத்தில் உல்லாஸமாக இருக்கையில், பிரணய ரோஷத்தினால் பிராட்டி பெருமாளை மல்லிகைமாலையைக் கொண்டு கட்டியதை அநுமான் அடையாளமாய் கூறுகின்றான்; இது மிகவும் அந்தரங்கமாக நடந்திருக்குமாதலால், இது மற்ற அடையாளங்களைப் போலன்றிச் சிறந்த அடையாளமாகுமென்க.  வநவாஸஞ்சென்றமை இன்னுங்கூறப்படாமையால், இச்செயல் நாட்டியிலிருந்தபோது நிகழ்ந்ததாகக் கொள்வது பொருந்துமேயன்றி, வநவாஸகாலத்து நிகழ்ந்ததாகக் கொள்ளுதல் பொருந்தாதென்க. முதலடியில் பிராட்டிக்கு மலர்மாலையுவமை- உடம்பின் இளைத்தன்மையிலும், மென்மையிலும், துவட்சியிலு மென். ஸுகாநுபவத்துக்கு ஏகாந்தமானகாலமாதலால் எல்லியம்போது எனப்பட்டது. ஈற்றடியில், அங்கு- அசை.

English Translation

O Lady of full blossomed garland, Do with lotus-eyes! I fall at your feet and submit, pray hear me speak. Sweetly at dusk in a solitary place, you bound him with a string of Jasmine flowers. This here is another proof.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top