(3136)

(3136)

வந்தாய்போ லேவந்தும் என்மனத் தினைநீ,

சிந்தாமல் செய்யாய் இதுவே யிதுவாகில்,

கொந்தார்க்கா யாவின் கொழுமலர்த் திருநிறத்த

எந்தாய்,யானுன்னை எங்குவந் தணுகிற்பனே?

 

பதவுரை

வந்தாய் போலே வந்தும்

(ப்ரஹ்லாதன் கஜேந்திரன் முதலானார்க்கு) வந்து தோன்றினாய் போலே வந்தாகிலும்

என் மனத்தினை

எனது நெஞ்சை

சிந்தாமல்

சிதிலமாகாதபடி

நீ செய்தாய்

நீ செய்வதில்லை

இதுவே

உதவி செய்யாமையாகிற இதுவே

இது ஆகில்

இப்படியே நீடித்திருக்குமாகில்

கொந்து ஆர்காயாவின் கொழுமலர் திரு நிறைத்த எந்தாய்

கொத்துக்கள் நிறைந்த காயாவினுடைய செழுமை தங்கிய பூவின் நிறம்போன்ற நிறத்தையுடைய ஸ்வாமியே!

(இப்படிப்பட்ட அழகை அநுபவித்தே தரிக்கவல்ல) அடியேன்.

உன்னை

உன்னை

எங்கு

எவ்விடத்து

வந்து அணுகிற்பன்

வந்து கிட்டவல்லேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  (வந்தாய்போலே) கீழ்ப்பாட்டில் “நின்தாளிணைக் கீழ் வாழ்ச்சி யான் சேரும் வகையருளாய் வந்தே” என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான். “ஆழ்வீர்! வந்தருளவேணும் வந்தருளவேணுமென்னா நின்றீர்; ஒரு கால் வந்து (இராமனாய்) பதினோராயிரமாண்டு இருந்தோம்; மற்றொருகால் வந்து (க்ருஷ்ணனாய்) நூற்றாண்டிருந்தோம். இன்னமும் வருவதென்றால் அது ப்ரயாஸமாயிருக்கிறது காணும் என்ன; அதுகேட்ட ஆழ்வார், ‘பிரானே! அவ்வவதாரங்கள் போலே எனக்காகவும் வந்து சில நாளிருந்து ஸேவை ஸாதிக்கத் திருவுள்ளமானால் அழகியது; அது செய்யத் திருவுள்ளமில்லையாகில் ஆனைக்குத் தொற்றினாப்போலேயும் ப்ரஹ்லாதனுக்குத் தோற்றினாப்போலேயும் எனக்குமொருகால் தோற்றியருளியாகிலும் உதவ வேணுமென்கிறார்.

வந்தாய்போலே வந்தும் என்றது ப்ரஹ்லாத கஜேந்த்ராதிகளுக்கு வந்தாப்போலேயாகிலும் வந்து என்றபடி. ஆனைக்கு அருள் செய்ததுபோலே எனக்கும் அருள் செய்து என் ஆர்த்தியைப் பரிஹரிக்கின்றிலை; இப்படி உதவாமையாகிறவிதுவே நித்தியமாய்ச் சொல்லுமாகில், நான் என்னுடைய முயற்சியினால் உன்னை வந்து சேருகையென்று ஒரு பொருளுண்டோ? இனி உன்னுடைய வடிவழகைக் காணப்பெறாதே இழந்து போமித்தனையன்றோ! என்றாறாயிற்று

 

English Translation

My Lord of Kaya-blossom hue!  You seem to come, my radiant Lord, but never stay! O, How now can I join you, if you do not stay and give me strength?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top