(3099)

(3099)

எம்மாவீட்டுத் திறமும்செப்பம், நின்

செம்மாபாதபற்புத் தலைசேர்த்தொல்லை,

கைம்மாதுன்பம் கடிந்தபிரானே,

அம்மாவடியென் வேண்டுவதீதே.

 

பதவுரை

கைம்மா துன்பம் கடிந்த பிரானே

கஜேந்திராழ்வானுடைய இடரைத் தீர்த்த பிரபுவே!

நின்

தேவரீருடைய

செம்

சிவந்த

மா

மேன்மை தங்கிய

பாதபற்பு

பாதபத்மங்களை

தலை

என் தலையிலே

ஒல்லை

சீக்கிரமாக

சேர்ந்து

சேர்க்கப்பெறறால்

எமர்வீடு திற

மிகவும் விலக்ஷணமான மோக்ஷத்தைப் பற்றின பேச்சையும்

செப்பம்

பிரஸ்தாவிக்கமாட்டோம்

அம்மா

ஸ்வாமியே!

அடியேன் வேண்டுவது

நான் பிரார்த்திப்பது

ஈதே

இதுதான். (நின் செம்மாபாதபற்புத்தலை சோக்க வேணுமென்பதே யென்றபடி)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பிரானே! உன்திருவடிகளை என் தலைமீது வைக்குமித்தனையே வேண்டுவது; எவ்வகையாலும் விலக்ஷணமான மோக்ஷத்திலும் எனக்கு விருப்பமில்லையென்கிறார். பாசுரந் தொடங்கும்போதே எம்மாவீட்டுத் திறமும் செப்பம் என்கிறார்- தம்முடைய அத்யவஸாயத்தின் உறைப்பை உபக்ரமத்திலேயே நன்குகாட்டுகிறபடி. ‘எம்முடைய’ என்னும் பொருள்தான் சுட்டு அது என்றுணர்க. எல்லாப் படியாலும் விலக்ஷணமான மோக்ஷணத்தைக் கொடுத்தாலும் வேண்டா, என்றபடி.

செப்பம் என்றது தன்மைப் பன்மையெதிர்மறை வினைமுற்று; செப்போம் என்றவாறு. இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி-“ஒரு தமிழன் ‘எம்மாவீட்டு விகல்பமும் செவ்வியவாம்’ என்றான்; அந்த பக்ஷத்திலே வீட்டு விகல்பமாவது, ஸாலோக்ய ஸாரூப்ய ஸாயுஜ்ய மென்கிறவை; செவ்வியவாகையாவது ஸாலோக்யாதிகளெல்லாம் இம்மோக்ஷத்திலே யுண்டாகை”  என்றுள்ளது. இதுவொரு நிர்வாஹம், திருப்பாவையில் “செப்பமுடையாய்” என்றும், திருவாய்மொழியாலேயே ஏழாம்பத்தில் “செப்பமே செய்து” என்றும், திருவாய்மொழியாலேயே ஏழாம்பத்தில் “செப்பமே செய்து” என்றும் உள்ளவிடங்களிலே செப்பம் என்பது பெயர்ச்சொல்லாகவுள்ளதன்றோ; அப்படியே இங்கும் இருப்பதாகக்கொண்டு இந்த நிர்வாஹம். இப்போது செப்பம் என்பதற்கு’ நன்றாக வுள்ளது’ என்று கருத்துத் தேறும். நின் செம்மாபாதபற்பை என் தலைமேல் சேர்த்தால், நான்கு விதமர்ன மோக்ஷ ஸாம்ராஜ்யங்களும் இதிலேயே அடங்கிவிட்டனவாகும், என்பது தேர்ந்த கருத்து.

பாதபற்பு-பாதபத்மம். ‘பத்மம்’ என்னும் வட சொல் பற்பு எனத் திரிந்தது.

 

English Translation

My Lord, you ended Gajendra’s woes! I seek no heaven for myself.  Grant me your lotus-red feet to wear on my head, Quick!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top