(2973)
அமரர் முழுமுத லாகிய ஆதியை,
அமரர்க் கமுதீந்த ஆயர் கொழுந்தை,
அமர அழும்பத் துழாவியென் னாவி,
அமரர்த் தழுவிற் றினிய கலுமோ.
பதவுரை
|
அமரர் |
– |
நித்யஸூரிகளுடைய |
|
முழு |
– |
ஸ்வரூபம் ஸ்திதி ப்ரவ்ருத்தி ஆகிய எல்லாவற்றிற்கும் |
|
முதல் ஆகிய |
– |
ஹேதுவாய்க்கொண்டு |
|
ஈந்த |
– |
(கடல்கடைந்து எடுத்துக்) கொடுத்தவனும், |
|
ஆயர் கொழுந்தை |
– |
இடையர்களுக்குத் தலைவனுமான எம்பெருமானை |
|
என் ஆவி |
– |
எனது ஆத்மாவானது |
|
அமர அழும்ப துழவிய |
– |
மிகவும் நெருக்கமாகக் கலசி |
|
ஆதியை |
– |
பிரதானனானவனும் |
|
அமரர்க்கு (இந்திராதி) தேவர்களுக்கு |
||
|
அமுது |
– |
(அவர்கள் விரும்பிய) அம்ருதத்தை |
|
அமர |
– |
இனிமேல் ஒருவராலும் பிரிக்கவொண்ணாதபடி |
|
தழுவிற்று |
– |
உகந்து கலந்தது; |
|
இனி அகலுமோ |
– |
இனிமேல் பிரிய வழியுண்டோ? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “என்னுடைய நன்னெஞ்சந்தன்னை யகல்விக்கத் தானுங்கில்லான்” என்று சொல்லவேண்டிய ப்ரஸக்திதானுமில்லையே; ‘எனது நெஞ்சும் அவனுஞ்சேர்ந்து ஒரு திரவியம் என்னலாம்படி ஒற்றுமைபெற்றுள்ள விதனைப் பிரிக்கும்வகைதான் உண்டோவென்கிறார்.
நித்யஸூரிகளினுடைய ஸ்வரூபஸ்திதி ப்ரவ்ருத்திகளெல்லாம் தன்னுடைய ஆதீனமாம்படியிருப்பவனும், நம்போலியரைக் கரணகளேபரங்கள் கொடுத்துப் படைத்தவனும் ‘எங்களுக்கு நீ வேண்டா; உப்புச்சாறு போதும்’ என்ற தேவர்கட்கும் கடல் கடைந்து அமுதமளித்தவனும், அந்த அம்ருதம் வேண்டா, நீயே வேணும் என்ற ஆயர்களுக்காக வந்து அவதரித்துத் தன்னைக் கொடுத்தவனுமான எம்பெருமானை என்னுடைய ஆத்மாவானது கிட்டிச் செறிந்து அனுபவித்து ஏகத்ரவ்யமென்னலாம்படி கலந்துவிட்டது; இரண்டு வஸ்துவாக இருந்தாலன்றோ பிரிக்கலாவது; இனி பிரிக்க விரகில்லை யென்றாராயிற்று…
English Translation
The Lord who gave ambrosia to the gods, is the darling-child of the cowherd clan. My souls has blended my being into him. How can the thought of separation arise again?
