(2909)
கரவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை
வரனவில் திறல்வலி யளிபொறை யாய்நின்ற
பரனடி மேல்குரு கூர்ச்சட கோபன்சொல்
நிரனிறை யாயிரத் திவைபத்தும் வீடே.
பதவுரை
|
கரம் |
– |
திடமான |
|
விசும்பு |
– |
ஆகாசமென்ன |
|
எரி |
– |
அக்னியென்ன |
|
வளி |
– |
வாயுவென்ன |
|
நீர் |
– |
ஜலமென்ன |
|
நிலம் |
– |
பூமியென்ன (ஆகிய) |
|
இவை மிசை |
– |
இவற்றின்மீதுள்ள (இவற்றிற்கு ஸ்வபாவங்களாயுள்ள) |
|
வரன் |
– |
சிறந்த |
|
நவில் |
– |
சப்தமென்ன |
|
திறல் |
– |
(கொளுத்தும்) சக்தி யென்ன |
|
வலி |
– |
(எதையும் தூக்கவல்ல) பலமென்ன |
|
அளி |
– |
குளிர்ச்சியென்ன |
|
பொறை |
– |
எதையும் பொறுத்துக் கொண்டிருப்பதாகிற க்ஷமையென்ன |
|
ஆய் நின்ற |
– |
ஆகிய இத்தருமங்களெல்லாம் தன்வசமாயிருக்கப்பெற்ற |
|
பரன் |
– |
ஸர்வேச்வரனுடைய |
|
அடிமேல் |
– |
திருவடிவிஷயமாக |
|
குருகூர் சடகோபன் சொல் |
– |
திருநகரியில் திருவவதரித்த நம்மாழ்வார் அருளிச்செய்த |
|
நிரல் நிறை |
– |
சப்தபூர்த்தியும் அர்த்தபூர்த்தியுங்கொண்ட |
|
ஆயிரத்து |
– |
ஆயிரம் பாசுரங்களிலே |
|
இவை பத்தும் |
– |
இப்பத்துப்பாசுரமும் |
|
வீடு |
– |
மோக்ஷபிராபகம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இப்பதிகம் கற்பார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டுகிறது இது இவை பத்தும்வீடே யென்றது இப்பத்துப் பாசுரமும் வீடாகிய மோக்ஷ ஸாம்ராஜ்யத்தைத் தரவல்லது என்றபடி.
பரணடிமேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன ஆயிரத்தில் இப்பத்தும் வீடளிக்குமென்க. பரனுக்கு அடைமொழியாய் நிற்பன முன்னிரண்டடிகள், முதலடியில் ஐந்து பூதங்கள் சொல்லப்படுகின்றன. இரண்டாமடியில் அந்தப் பூதங்களின் குணங்கள் முறையே சொல்லப்படுகின்றன.
1. விசும்பு – ஆகாசம்; அதன் குணம் – நவில்- சப்தம்
2. எரி- அக்நி; அதன் குணம்- திறல்- தஹநசக்தி
3. வளி – வாயு; அதன் குணம் – வலி – மிடுக்கு.
4. நீர் – ஜலம், அதன் குணம்- அளி- குளிர்ச்சி.
5. நிலம் – பூமி; அதன் குணம் – பொறை- க்ஷமை என்று உணர்க.
இவையாய்நின்ற பரன் என்றது- இப்படிப்பட்ட பூதங்களையும் அவற்றின் குணங்களையும் உண்டாக்கி அவையெல்லாம் தானிட்ட வழக்காம்படி யிராநின்ற பரமபுருஷன் என்றபடி, பஞ்சபூதங்களையும் அவற்றின் குணங்களையும் சொன்து மற்றுமுள்ள தத்துவங்களையுஞ் சொன்னபடியாய் லீலாவிபூதி முழுவதையுஞ் சொல்லிற்றாகி, நித்ய விபூதிக்கும் அது உபலக்ஷணமாகி, ஆக உபயவிபூதி நீர்வாஹகனாயிருக்கிற பரம புருஷனென்றதாயிற்று.
குருகூர் = *குருகா என்னும் வடசொல் குருகையென ஐயீறாயிற்று. ஆழ்வார் திருநகரி வடமொழியில் ‘குருகாபுரி’ என வழங்கப்பட்டது. அதுவே தமிழில் குருகூரென வழங்கலாயிற்று.
ஆழ்வார் தாமே* குருகூர்ச்சடகோபன்சொன்ன* என்று பிறர்போலக் கூறினது கவிஸம்ப்ரதாயம் பக்தி தலையெடுத்துத் திவ்யப் பிரபந்தங்களை அருளிச்செய்கிற ஆழ்வார் தமது திருநாமத்தை நிர்தேசித்துக் கொள்வது- பின்புள்ளார் ஆதரித்துப் பரிக்ரஹித்தற் பொருட்டாம்.
நிரனிறையாயிரத்து என்றவிடத்து ஈடு முப்பத்தாறாயிரப்படி ஸ்ரீஸூக்திகள் காண்மிண்:- “நிரல்நிறை என்னுதல், நிரன்நிறை என்னுதல், நிரல் நிறை என்றபோது சப்தங்களும் நிறை என்னுதல் நிரல் நிறை என்றபோது சப்தங்களும் நிறைந்து அர்த்தங்களும் புஷ்கலமாயிருக்கை. நிரன் நிறை என்றபோது நேரே நிறுத்தப்படுகை. லக்ஷணங்களிற் குறையாமே எழுத்துஞ்சொல்லும் பொருளு மந்தாதியும் க்ரமத்திலே நிறுத்தப்படுகை” என்று.
ஆயிரம் = ஆயிரம் பாசுரம் பாடவெணுமென்று ஆழ்வார் ஸங்கல்பஞ்செய்து கொண்டு அருளிச்செய்யப்புகலில்லை. *மயர்வற மதிநலமருளப் பெற்றவராகையாலே ஆயிரம் பாசுரங்கள் தம் திருவாக்கிலே அவதரிக்குமென்றுணர்ந்து அருளிச் செய்தபடி. எம்பெருமான் விஷயத்திலே ஆயிரம்பாசுரம் பேசியல்லது தரிக்கமாட்டாத தம்முடைய நிலைமையைக்கொண்டு அருளிச்செய்தபடியாகவுமாம்.
English Translation
The decad of the thousand songs by Kurugur Satakopan on the Lord who exists in Fire, Earth, Water, sky and Air, subtly as heat, mass, coolness strength and sound, offers liberation to those who recite it.
