(2906)

(2906)

சுரரறி வருநிலை விண்முதல் முழுவதும்

வரன்முத லாயவை முழுதுண்ட பரபரன்

புரமொரு மூன்றெரித் தமரர்க்கு மறிவியந்து

அரனயன் எனவுல கழித்தமைத் துளனே.

 

பதவுரை

சுரர் அறிவு அரு நிலை

(பிரமன் முதலிய) தேவர்களுக்கும் அறிவொண்ணாத நிலைமையை உடைத்தான்

விண் முதல் முழுவதும்

மூலப்ரக்ருதி முதலாகவுள்ள ஸகலவஸ்துக்களுக்கும்

வரன் முதல் ஆய்

சிறநத் காரண பூதனாய் (அவற்றையெல்லாம் படைத்தவனாயும்)

அவை முழுது உண்ட

அவற்றையெல்லாம் (பிரளயகாலத்தில்) திருவயிற்றிலே வைத்து நோக்குபவனாயுமுள்ள

பரபரன்

பரம்புருஷன்

அரன் என

ருத்ரமூர்த்தியின் உரவத்தைத் தரித்தவனாகி

ஒரு மூன்று புரம் எரித்து

இணையில்லாத திருபுரங்களைத் தறித்தும்

உலகு அழித்து

உலகங்களை அழித்தல் செய்தும்

அயன் என

நான் முகக்கடவுள் என்னும் படியாக நின்று

அமரர்க்கு

தேவர்களுக்கு

அறிவு இயந்தும்

ஞானத்தைக் கொடுத்தும்

அலகு அமைத்து

உலகங்களைப்படைத்தல் செய்தும்

உளன்

அவர்களுக்குள்ளே ஆத்மா வாயிருக்குமவன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வேதாந்தங்களில் ஸித்திப்பவனும் எம்பெருமானேயென்றும் அனைத்துக்கும் ஆத்மாவாய் நிற்பவனும் அவனேயென்றும் உலகத்தில் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களை நடத்துகிறவனும் அவனேயென்றும் கீழ்ப்பாசுரங்களில் அருளிச் செய்த ஆழ்வாரைநோக்கிச் சிலர் ‘இப்படி எல்லாப் பெருமைகளையும் ஒருவன் தலையிலேயே ஏற்றிச் சொல்லிவிடலாமோ? பிரமன் சிவன் முதலான தேவர்களும் சிலசில அரியபெரிய காரியங்களை நடத்திப்போருவதாக ப்ராமணங்களில் விளங்கா. நின்றதே; சிவபிரான் த்ரிபுரஸம்ஹாரமாகிற மிகப்பெரிய அருந்தொழிலை நடத்தினதென்றும் ஸகலலோகத்தின் ஸம்ஹாரத்தொழிலுக்கு அதிகாரியாயிருக்கின்றானென்றும் பிரமனும் தேவர்களுக்கெல்லாம் ஜ்ஞாநப்ரதானம் பண்ணினானென்றும் லோகஸ்ருஷ்டியை நடத்திப் போருகிறா னென்றும் பிரமாணங்களால் நன்கு விளங்கும்போது எல்லாப் பெருமைகளையும் விஷ்ஸணுவாகிற ஒரு வ்யக்தியின் மேலேயே ஏறிட்டுச் சொன்னால் பக்ஷபாதத்தாலே சொல்லுகிறதாக ஆகுமே’ என்று கூற, அவர்களுக்குத் தெயிவு பிறக்குமாறு அருளிச் செய்யும் பாசுரம் இது.

முன்னடிகளில் ஸ்ருஷ்டியையும் ஸம்ஹாரத்தையும் பேசியிருப்பதன் கருத்து- இந்த இரண்டு தொழில்களையும் பிரமனுக்கும் சிவனுக்கும் அஸாதாரணமாகச் சிலர் நினைப்பதால் அந்த நினைவைக் குலைப்பதற்குத் தம்முடைய ஸித்தாந்தத்தை ஸ்தாபித்துச் சொல்லுகிறபடி ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களென்னும் மூன்று காரியங்களில் ரக்ஷணமாகிற ஸ்திதி என்னும் காரியம் மாத்திரம் எம்பெருமானுடையது, மற்ற இரண்டு காரியம் ப்ரஹ்மருக்ரர்களினுடையது என்று பலர் நினைத்திருப்பர்கள்; அன்னவர்களுடைய நினைவின்படி ரக்ஷணத்தொழில் எம்பெருமானுடையதே என்பதில் விவாத மொன்றுமில்லாமையால் பிரதிபக்ஷிகளாலும் அங்கீகரிக்கப்பட்ட அவ்விஷயத்தை மீண்டும் நாம் எடுத்து ஸ்தாபிக்க வேண்டிய அவசியமில்லை யென்றும் விவாதாஸ்பதமான மற்ற இரண்டு காரியங்களைப் பற்றியே இங்கு உண்மையைப்பேசவேண்டுமென்றும் திருவுள்ளம் பற்றி ஆழ்வார் அவ்விரண்டையுமே இப்பாட்டில் பிரஸ்தாவித்து உண்மை யுணர்த்துகின்றாரென்று உணர்க.

கஸ்மிந் நுகலு ஆகாச ஓதச்ச ப்ரோதச்ச என்கிற உபநிஷத்வாக்யத்தில் ஆகாச சப்தத்தினால் ப்ரக்ருதியைக் கொல்லுகிறதாக வேதாந்திகளின் ஸித்தாந்தம். அந்த ரீதியில் இங்கு வீண் என்கிற ஆகாசவாசக சப்தமும் ப்ரக்ருதி வாசகமாகும் என்று ஆசார்யர்கள் நிர்வஹித்தருளினர். இனி, விண் என்கிற இச்சொல் பூதங்களிலொன்றாகிய ஆகாசத்தையே சொல்லுகிற தென்பாருமுளர். *ஆகாசரத் வாயு: வாயோரக்தி:* என்ற ஆகாசமடியாக ஸ்ருஷ்டிக்கிரமம் சொல்லுகிற ஒரு புடையும் வேதாந்தங்களிலுள்ளதனால் அதற்கிணங்கும்.

அவைமுழுதுண்டபரபரன் = ம்ருத்யு முதலானவர்களுக்கு ஏகதேச ஸம்ஹாரகத்வமே உள்ளது. ஸம்ஹார கர்த்தாக்களையுமுட்பட ஸம்ஹரிக்கவல்ல ப்ராத்பரன் எம்பெருமானேயாவன்.

அமரர்க்கும் அறிவியந்து = நான்முகன் தேவர்கட்கு ஞானமளித்ததாக ஒரு ப்ரஸித்தியுண்டு. அதனையும் நிரூபித்துப் பார்க்குமளவில், ச்வேதாச்வதர உபநிஷத்தில் எம்பெருமானே நான்முகனைத் தனது திருநாபிக்கமலத்தில் தோற்றுவித்து அவனுக்கு வேதோபதேச முகத்தால் ஞானமுமூட்டினதாக ஓதிக்கிடக்கையாலே பிரமன் செய்த ஜ்ஞான ப்ரதானமும் எம்பெருமானதீனமாகவேயிருக்குமாயிற்று.

சுரரறிவருநிலைவிண் முதல் முழுவதும் வரன்முதலாய் அவைமுழுதுண்ட பரபரன் அரனெனப் புரமொருமூன்றெரித்து அலகு அழித்து, அயனென அமரர்க்கு அறிவியந்து உலகு அமைத்துளன்- என்று அந்வய க்ரமமாயிற்று.

 

English Translation

Though He is every where, He cannot be seen, even by the gods. He is the first cause, the almighty, who swallowed all.  He burnt the three cities, and granted wisdom to the gods, He is Brahma the creator, and Siva the destroyer too.

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top