(289)
ஏழை பேதைஓர் பாலகன் வந்துஎன் பெண்மக ளையெள்கி
தோழி மார்பலர் கொண்டு போய்ச்செய்த சூழ்ச்சியை யார்க்குரைக்கேன்
ஆழியா னென்னு மாழ மோழையில் பாய்ச்சி அகப்படுத்தி
மூழை யுப்பறி யாத தென்னும் மூதுரையு மிலளே.
பதவுரை
| ஏழை |
– |
சாபல்யமுடையவளும் |
| பேதை |
– |
அறியாமையுடையவளும் |
| ஓர் பாலகன் |
– |
இளம்பருவத்தையுடையளுமான |
| என் பெண் மகளை |
– |
எனது பெண்பிள்ளையை |
| தோழிமார் பலர் வந்து |
– |
பல தோழிகள் அணுகி வந்து |
| என்கி |
– |
(விளையாட வரவேணுமென்று) வஞ்சித்து |
| கொண்டு போய் |
– |
அழைத்துக் கொண்டுபோய் |
| ஆழியான் என்னும் |
– |
ஸர்வேச்வரன் என்று ப்ரஸித்தமான |
| ஆழம் மோழையில் |
– |
ஒருவராலும் நிலைகொள்ளவொண்ணாத கீழாற்றில் |
| பாய்ச்சி |
– |
உள்ளுறத்தள்ளி |
| அசப்படுத்தி |
– |
(அதிலே) அசப்படுத்தி |
| செய்த சூழ்ச்சியை |
– |
(இவ்வாறு) செய்த கபடத்தொழில்களை |
| ஆர்க்கு உரைக்கேன் |
– |
யாரிடம் முறையிடுவேன்?; |
|
(இம்மகளோ வென்றால்) |
||
| மூழை உப்பு அறியாதது என்னும் மூதுரையும் இவள் |
– |
“அகப்பையானது (பதார்த்தத்தின்) ரஸத்தை அறியாது” என்கின்ற பழமொழியின் அறிவையும் தன்னிடத்து உடையவளல்லள். |
English Translation
My daughter was as innocent child, attached to me. To whom do I tell what mischief her many friends played? They took her with them and dumped her into a deep whirlpool called ‘discus-wielder’. No longer is she the innocent “spoon that does not taste the salt of the soup.
