(289)

(289)

ஏழை பேதைஓர் பாலகன் வந்துஎன் பெண்மக ளையெள்கி

தோழி மார்பலர் கொண்டு போய்ச்செய்த சூழ்ச்சியை யார்க்குரைக்கேன்

ஆழியா னென்னு மாழ மோழையில் பாய்ச்சி அகப்படுத்தி

மூழை யுப்பறி யாத தென்னும் மூதுரையு மிலளே.

பதவுரை

ஏழை

சாபல்யமுடையவளும்
பேதை

அறியாமையுடையவளும்
ஓர் பாலகன்

இளம்பருவத்தையுடையளுமான
என் பெண் மகளை

எனது பெண்பிள்ளையை
தோழிமார் பலர் வந்து

பல தோழிகள் அணுகி வந்து
என்கி

(விளையாட வரவேணுமென்று) வஞ்சித்து
கொண்டு போய்

அழைத்துக் கொண்டுபோய்
ஆழியான் என்னும்

ஸர்வேச்வரன் என்று ப்ரஸித்தமான
ஆழம் மோழையில்

ஒருவராலும் நிலைகொள்ளவொண்ணாத கீழாற்றில்
பாய்ச்சி

உள்ளுறத்தள்ளி
அசப்படுத்தி

(அதிலே) அசப்படுத்தி
செய்த சூழ்ச்சியை

(இவ்வாறு) செய்த கபடத்தொழில்களை
ஆர்க்கு உரைக்கேன்

யாரிடம் முறையிடுவேன்?;

(இம்மகளோ வென்றால்)

மூழை உப்பு அறியாதது என்னும் மூதுரையும் இவள்

“அகப்பையானது (பதார்த்தத்தின்) ரஸத்தை அறியாது” என்கின்ற பழமொழியின் அறிவையும் தன்னிடத்து உடையவளல்லள்.

English Translation

My daughter was as innocent child, attached to me. To whom do I tell what mischief her many friends played? They took her with them and dumped her into a deep whirlpool called ‘discus-wielder’. No longer is she the innocent “spoon that does not taste the salt of the soup.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top