(2639)
மருங்கோத மோதும் மணிநா கணையார்,
மருங்கே வரவரிய ரேலும்,-ஒருங் கே
எமக்கவரைக் காணலா மெப்போது முள்ளால்,
மனக்கவலை தீர்ப்பார் வரவு.
பதவுரை
|
வரவு |
– |
(தம்முடைய) வருகையினாலே |
|
மனம் கவலை தீர்ப்பார் |
– |
(நமது) மணத்திலுள்ள துன்பங்களைத் தொலைப்பவரும் |
|
மழுங்கு ஓதம் மோதும் |
– |
ஸமீபத்திலே கடலலை மோதும் படியாக. (திருப்பாற்கடலிலே) |
|
மணி நாக அணையார் |
– |
மாணிக்கத்தையுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடையவருமான பெருமான். |
|
மருங்கே வர அரியர் எலும் |
– |
(ஒருவர்க்கும் ஸ்வப்ரயத்தாலே அணுகி வந்து) கிட்ட முடியாதவராயினும் |
|
எமக்கு |
– |
நமக்கு |
|
அவரை |
– |
அப்பெருமானை |
|
உன்னால் |
– |
மனத்தினால் |
|
ஒருங்கே |
– |
ஒரே தன்மையாக |
|
எப்பொழுதும் காணலாம் |
– |
எப்போதும் கண்டு அநுபவிக்கட்டும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (மருங்கோதமோதும்.) எம்பெருமானைத் தம் முயற்சியாலே பெற நினைப்பார்க்கு அவன் ஒரு நாளும் கிட்ட முடியாதவனேயாகிலும், அவன்றானே தன்னுடைய நிர்ஹேதுகக்ருபையாலே என்னெஞ்சினுள்ளே வந்து புகுந்ததனனாதலால் எனக்கு அவன் எப்போதும் ஸேவிக்க எளியவனாகவே யிராநின்றானென்கிறார்.
“வரவு மனக்கவலை தீர்ப்பார்”= ‘வரவு’ என்பதில் மூன்றாம் வேற்றுமையுருபு தொக்கிக் கிடக்கிறது; வாயினாலே என்றபடி. தானாகவே வந்து மனக்கவலையைத் தீர்க்கும் பெருமான் என்கை ஓதம் மருங்கு மோதும் மணிநாகணையார் ஃதெண்திரை வருடத்திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான்மேல் திருக்கண் வளருமவர் என்றவாறு. இப்படிப்பட்ட பரமபுருஷன். மருங்கே வர அரியரேலும்= ஒருவர்க்கும் தமது முயற்சி கொண்டு அணுக முடியாதவனாயினும்; உள்ளால் நமக்கு அவரைக் காணலாம் = என்னுள்ளத்துள்ளே உறைகின்றவனைக்காண எனக்கு அருமையுண்டோ? என்கிறாராயிற்று.
English Translation
The Lord reclines on a diademed serpent in the wave-lapping ocean. He cannot come to us. But we can see him well in our hearts at all times, and be relieved of worries.
