(2587)

(2587)

இவையன்றே நல்ல இவையன்றே தீய,

இவையென் றிவையறிவ னேலும்,-இவையெல்லாம்

என்னால் அடைப்புநீக் கொண்ணா திறையவனே,

என்னால் செயற்பால தென்?

 

பதவுரை

இறையவனே

எம்பெருமானே!

இவை அன்றே நல்ல

உன்னைப் புகழாமையும் சிந்தியாமையுமாகிற இவையன்றோ நல்லது;

இவை அன்றே தீய

உன்னைப் புகழ்வதும் சிந்திப்பதுமாகிற இவையன்றோ கெட்டது;

இவை இவை என்ற அறவனேனும்

(ஆகவே) ‘இன்னது இப்படிப்பட்டது’ என்று நான் உண்மையில் தெரிந்து கொண்டிருக்கிறேனாகிலும்

இவை எல்லாம்

புகழாமையும் மதியாமையும், புகழ்தலும் மதித்தலுமாகிய இவையெல்லாம்

என்னால்

என்னாலே

அடைப்பு நீக்கு ஒண்ணாது

பற்றவும் முடியாது, விடவும் முடியாது;

என்னால் செயற்பாவது என்

(சபலனான) என்னாலே செய்யக்கூடியது என்ன இருக்கிறது?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (இவையன்றே நல்ல.) “சீறல் நீ” என்று திருவுள்ளத்தில் இரக்கமுண்டாம்படி பிரார்த்திக்க ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்-, “ஆழ்வீர்! என்னுடைய சீற்றம் கிடக்கட்டும்; நீர் என்ன தீர்மானம் செய்து கொண்டீர்? ‘புகழ்வது தகுதிதான்’ என்று கொண்டீரா? அல்லது புகழத்தகாது என்றே கொண்டீரா? அதை நிஷ்கர்க்ஷித்துச் சொன்னீராகில்; பிறகு பார்ப்போம்” என்றான்; அதற்கு உத்தரமாயிருக்கிறது இப்பாட்டு. இதில் சொல்லுகிறது யாதெனில்; எம்பெருமானே! இது யுத்தம், இது ஆயுக்தம் என்கிற விஷயம் அடியேனுக்குத் தெரியாமையில்லை; அற்ப ஞானிகள் உன்னைப் புகழ்வது அயுக்தம். புகழாதிருப்பது யுத்தம்- என்பதை அடியேன் நன்று அறிவேன். அதில் ஸம்சயமில்லை; ஆனால், அறிந்தபடியே அநுஷ்டிக்க என்னாலாகாது. நான் அறிந்திருக்கிறபடியே அநுஷ்டிக்க வேணுமானால், உன்னைப் புகழ்வதை விட்டுப் புகழாமையைப் பற்றவேணுமிறே இந்த வீடுபற்றுக்கள் என்னால் செய்யப்போகாது. (உன்னைப் புகழாதிருக்க என்னால் முடியாது என்றபடி.)

* என்னால் செயற்பாலது என்? = என்னுடைய இஷ்டப்படி காரியம் நிறைவேறுமாகில் உன்னைப் புகழாமலிருந்துவிடுவேன்; அதில் தடையில்லை; *“என் நா முதல் வந்து புகுந்து நல்லீன்கவி, தூமுதல் பத்தர்க்குத்தான் தன்னைச்சொன்ன என்வாய் முதலப்பன்” (திருவாய்மொழி 7-9-3) என்றபடி என்னுடைய வாக்குக்களுக்கு ப்ரவர்த்தகன் நீ யாகையாலே, அது புகழ்வதோ இகழ்வதோ உன் காரியமேயொழிய என்னுடைய காரியமாக யாதொன்றுமில்லைகாண் என்றவாறு.

இனி, “என்னால் செயற்பாலதென்” என்பதற்கு – எனது அன்பு செய்கிறதேயொழிய நான் செய்வதொன்றுமில்லை என்பதாகவும் உரைக்கலாம்.

நல்ல, தீய- பலவின்பால் குறிப்பு விலைமுற்று. அடைப்பு நீங்கொண்ணாது = அடைப்பாவது பரிந்தரஹித்தல்; நீங்காவது பரித்யஜித்தல்… பரிக்ரஹிந்தக்கதான புகழாமையைப் பரிக்ரஹிக்கவும், பரித்யஜிக்கத் தக்கதான புகழ்வதைப் பரித்யஜிக்கவும் என்னாலாகாது என்றபடி,  ஏன் உம்மாலாகாது? என்னில்; அதற்கு மைதானம் என்னால் செயற்பாலதென்? என்பதாம் … …

 

English Translation

O Lord! I do not know what is good, what is bad, what is what, and what is what not.  And even if do, I cannot take out or retain anything on my own.  What is there that I can do?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top