(2555)

(2555)

நலியும் நரகனை வீட்டிற்றும், வாணன்திண் டோள்துணித்த

வலியும் பெரு மையும் யாஞ்¦ சால்லும் நீர்த்தல்ல, மைவரைபோல்

பொலியும் உருவில் பிரானார் புனைபூந் துழாய்மலர்க்கே

மெலியும் மடநெஞ்சி நார்,தந்து போயின வேதனையே.

பதவுரை

(எமது நாயகனார்)

நலியும்நரகனை வீட்டிற்றும்

(உலகத்தை) வருத்துகிற நரகாசுரனைக் கொன்றதும்
வாணன் திண்தோள் துணிந்த வலியும்

பாணாஸுரனது வலிய தோள்களை அறுத்துத் தள்ளிய வலிமையும்
பெருமையும்

(அப்போரில் வெளிக்காட்டிய) தலைமையும்
யாம் சொல்லும் நீர்த்து அல்ல

(எளிமையான) யாம் புகழ்ந்து சொல்லி முடிக்குத் தன்மையானவல்ல;
மை வரைபோல் பொலியும் உருவின் பிரானார்

அஞ்சனகிரிபோல விளங்குகிற வடிவத்தையுடைய அத்தலைவரது
புனை பூதுழாய் மலர்க்கே

சாத்திய அழகிய திருத்துழாய்ப் பூமாலையைப்பெறுவதற்காகவே
மெலியும்

ஆசைப்பட்டு வருந்துகிற
மட நெஞ்சினார்

(எமது) பேதைநெஞ்சு
தந்து போயின

(தான் எம்மைவிட்டுப் போம் பொழுது எமக்குக்) கொடுத்துவிட்டுப் போனவை
வேதனை

இத் துன்பங்கள்.

காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பிரிவாற்றாத தலைவி தலைவனது ஆற்றலைக் கருதிநெஞ்சழிந்து இரங்கும் பாசுரம்  இது. நானோவென்னில் எனது நாயகருடைய அதிமாநுஷ சேஷ்டிதங்களையும் ப்ரபுத்வத்தையும் நோக்கி ‘நமக்கு அவர் துர்லபர்’ என்று கருதி ஒருவாறு காதலையடக்கி ஆறியிருக்குந் தன்மையுடையேன்; எனது மனமோ அங்ஙனம் ஆறியிராமல் அவனது மாலையைப் பெறுதற்கு ஆசைப்பட்டு அது கிடையாமையால் எனக்கு இப்படிப்பட்ட வருத்தத்தை வினைத்துத்தான் அவனிடம் போய்விட்டது என்று இரக்கத்தோடு உரைத்தானாயிற்று. நரகாஸுரனைக் கொன்று பதினாறாயிரத்தொருநூறு கன்னிகைகளை மணஞ்செய்து கொண்டவரும், பாணாஸுரனது தோள்களைத் துணித்து ஆவன் மகனான உஷை தனது போனான அநிருத்தனை வெளிப்படையாக மணஞ் செய்துகொண்டு கூடி வாழும்படி செய்தவருமான தலைவர் அவர் பக்கற்காதலியாகிய என்னை வந்து அடைந்து இன்பமடைவிக்கவேண்டாவோ வென்பால் அவ்விரண்டு வரலாறுகளையும் எடுத்துக் கூறினாள். தாமே தேவாதிதேவ ரென்று தோன்றும்படி வெளியிட்ட வீர்யசக்தியை ‘பெருமை’ என்றது.

வீட்டிற்று  உயிர் விடுவித்தது; இறந்தகாலத் தொழிற்பெயர். விடு என்பதன் விகாரமாகிய வீடு என்பதனை பிறவினையான ‘வீட்டு’- பகுதி; று- விகுதி. இனி, வீழ்த்திற்கு என்பது வீட்டிற்று என மரூஉ வாயிற்றென்பாருமுளர். நீர்த்து = நீர்மை என்னும் பண்பின் அடியாய்ப்பிறந்த ஒன்றன்பாற் குறிப்புமுற்று. மை வரை = மேகம் படிந்த மலை என்னவுமாம். பாட்டின் முடிவில் ‘வேதகா’ என்னும் வடசொல் ஐயீறாகத்திரித்தது. வலியின் பெருமையும், என்றும் பாடமுண்டாம்.

ஆச்ரித விரோதிகளை அழிக்குங்குணம் எம்பெருமானுக்கு இயல்பாயிருக்கவும் தாம் அவனருளால் தமது பிரதிபந்தங்கள் ஒழிய அவனது போக்யத்தையை அநுபவிக்கப் பெறாமல் மனங்கலங்கி அதனால் வருந்துகிறபடியை ஆழ்வார் அருளிச் செய்தல் இதற்கு உள்ளுறை பொருள். எம்பெருமானது விரோதி நிரஸந் சக்தியும் பரத்வ மஹிமையும் எம்போலியர்க்கு வரையறுத்துச் சொல்லக் கூடியவையல்ல; தேவங்களுக்கும் எட்டாதவை; அப்படிப்பட்ட ஸர்வேச்வரனைக்கிட்டு அநுபவிக்கப் பெறாதவளவில் அவனது யோக்யதையில் மனஞ்செலுத்துதலும் ஆற்றாமை துயிரையே மூட்டுகின்றதென்றவாறு.

English Translation

Even Krishna the dark radiant mountain-like lord, does not have the compassion we seek, though he destroyed Narakasura, cut off the thousand strong arms of Banasura and had the strength to overcome all his detractors. My foolish heart left me seeking the lord’s blossoming Tulasi garland. Alas, misery is all that I got in the process.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top