(2552)
உலாகின்ற கெண்டை ஒளியம்பு, எம்ஆவியை ஊடுருவக்
குலாகின்ற வெஞ்சிலை வாண்முகத்தீர்,குனிசங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரியம் பள்ளியம் மானடியார்
நிலாகின்ற வைகுந்தமோ,வையமோ? நும்நிலையிடமே.
பதவுரை
| உலாகின்ற |
– |
(காதளவுஞ் சென்று மீண்டு) உலாவுகிற |
| கெண்டை |
– |
கெண்டை மீன் வடிவமான |
| ஒளி அம்பு |
– |
ஒளியையுடைய (கண்களாகிய) அம்புகள் |
| எம் ஆவியை ஊடு உருவ |
– |
எமது உயிரை ஊடுருவித் துளைக்கும்படி |
| குலாவுகின்ற |
– |
(அவ்வம்புகளைப் பிரயோகிப்பதற்கு) வளைகிற |
| வெம்சிலை |
– |
(புருவமாகிய) கொடிய வில்லையுடைய |
| வாள் முகத்தீர் |
– |
ஒளியுள்ள முகமுடையவர்களே! |
| குனி சங்கு இடறி |
– |
வளைந்த வடிவமுள்ள சங்குகளைக் கொழித்து எழுந்து |
| புலாகின்ற |
– |
மீன் நாற்றம் வீசப்பெற்ற |
| வேலை |
– |
அலைகிளர்ச்சியையுடைய |
| புணரி |
– |
கடலை |
| அம்பள்ளி |
– |
அழகிய படுக்கை யிடமாகவுடைய |
| அம்மான் |
– |
ஸர்வேச்வரனது |
| அடியார் நிலா கின்ற |
– |
பக்தர்களான நித்யமுக்தர் விளங்கி வாழப்பெற்ற |
| வைகுந்தமோ |
– |
ஸ்ரீவைகுண்ட லோகோம |
| வையோம |
– |
இந்த நிலவுலகமோ |
| நும் நிலை இடம் |
– |
உங்களது இருப்பிடம்? |
ஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- மதியுடம்படுக்கலுற்ற நாயகன் நாயகியின் தோழியரைப் பதிவினாதல் இது. நாயகியும் தோழியும் ஒருங்கிருந்த ஸமயம் நோக்கி நாயகன் அங்குச்சென்று தன் கருத்தைக் குறிப்பிப்பதற்கு ஒரு வியாஜமாக ஊர் வினாவுகின்றானென்க.
காதளவும் நீண்டு கெட்டை மீன் வடிமான கண்களாகிய அம்புகள் எமது உயிரை ஊடுருவித் துளைக்கும்படியாக அவ்வம்புகளைப் பிரயோகிப்பதற்கு வளைந்திருகின்ற புருவமாகிய கொடிய வில்லையுடைய அழகிய முகமுடையவர்களே! என்று நாயகியையும் அவளது தோழியரையும் விளித்தபடி. கண்களை அம்பாகவும் புருவத்தைச் சிலையாகவும் வருணித்தல் கவிமரபு. கையிற்கொள்ளும் வில்லம்புகளால் வருத்தும் உலகவியல்பு’ எனப்பட்டது.
பின்னடிகள் பதிவினாவுவன. இவ்வுலகத்தவரினும் இவர்களது வடிவழகு மிக வேறுபட்டுச் சிறந்திருத்தலால் ‘நும் நிலையிடம் வைகுந்தமோ?’ என்றது; இவர்களைக் கண்டது இவ்வுலகத்திலாதலால் ‘வையமோ?’ என்றது.
இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாவது- ஆழ்வாரது ஸ்வரூபத்தைக் கண்டு ஈடுபட்ட பாகவதர் அவரையும் அவரோடொத்த அவரது அன்பரையும் நோக்கி ‘நுமது இடம் அந்த நித்யவிபூதியோ? என்று வியந்துரைத்தலாம். (உலாகின்ற + வாண்முகத்தீர்!) பரந்த குளிர்ந்த நுண்ணிய விளக்கமுடைய உமது ஞானத்தை எமது நெஞ்சிலே பதியும்படி செலுத்தும் முகமலர்ச்சியுடையவரே! என விளித்தபடி. எம்பெருமானுடைய நித்யமுக்தர் வஸிக்கும் நித்ய விபூதியோ இந்த லீலாவிபூதியோ உமது இருப்பிடம்? ஆழ்வாதர், ஞானம் முதலியவற்றின் மஹிமையால் முக்தரென்று சொல்லும்படியும் அங்கு நின்று இங்கு வந்தவரொருவரென்று சொல்லும்படியும் உள்ள தன்மை இப்படி விகற்பித்து வினாவுதற்குக் காரணம். அன்றியும் வீணாநுபவம் கிடைக்கப் பெறாமையால் இவர் இவ்வுலகத்தவரோவென்றும், ஸம்ஸார ஸம்பந்தம் இல்லாமையால் அவ்வுலகத்தவரோவென்றும் சங்கை நிகழ்ந்ததென்க.
English Translation
O Bright-faced Ladies with fish-like dart-sharp eyes, shot with bow-like eyebrows to pierce through our souls! Is your place of permanent residence the Vaikunta that devotees of the ocean-reclining lord prefer, or is it the Earth?
