(2521)

(2521)

நியமுயர் கோலமும் பேரும் உருவும் இவையிவையென்று

அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலும் அங்கங்கெல்லாம்

உறவுயர் ஞானச் சுடர்விளக் காய்நின்ற தன்றியொன்றும்

பெறமுயன் றாரில்லை யால்எம்பி ரான்றன் பெரு மையையே.

பதவுரை

நிறம்

திருமேனி நிறமும்
உயர் கோலமும்

சிறந்த அலங்காரமும்
பேரும்

திருநாமமும்
உருவும்

வடிவமும்

இவை இவை என்று இனனின்னவையென்று

அங்கு அங்கு எல்லாம்

கீழ்ச்சொன்ன நிறம் அலங்காரம் திருநாமம் வடிவம் இவையெல்லாவற்றிலும்
உற உயர் ஞானம் சுடர் விளக்கு ஆய் நின்றது அன்றி

மிகவுயர்ந்த (தமது) ஞானமாகிற தீபத்தால் சிறிது விளக்கத்தைப் பெற்று நின்ற தொழிய
அறம் முயல் ஞானம் சமயிகள் பேசிலும்

தருமமார்க்கத்தால் முயன்று பெற்ற ஞானத்தையுடைய  வைதிக ஸம்ப்ரதாயஸ்தர்கள் (ஒருவாறு பிறர்க்குச்) சொன்னாலும். (அவர்கள்)
எம்பிரான் பெருமையை

எம்பெருமானுடைய (ஒப்புயர்வற்ற) மஹிமையை
ஒன்றும் பெற முயன்றார் இல்லை

ஒருவையாலும் முற்றும் அளவிட்டுக் கூறப்பெறும்படி முயற்சி செய்தார்களில்லை.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நாயகி நாயகனுடைய பெருமையையுரைக்கும் பாசுரமிது. “வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக்கண்டார், ஊழ்கொண்ட சமயத் தன்னாலுருவுகண்டாரை யொத்தார்” (கம்பர்) என்றாற்போல எம்பெருமானுடைய நாமம் ரூபம் குணம் முதலியவற்றில் அந்தந்த மதஸ்தர்கள் தாம் தாம் ஒவ்வொரு பகுதியை அறிந்தாரேயன்றி முற்றும் எவரும் அறிந்திலர் என்கிறாள். கீழ்ப்பாட்டில் ‘எம்பிரானதெழில் நிறம் யவர்க்கு மெண்ணுமிடத்ததுவோ’ என்றதன்மேல், ‘எம்பெருமானுடைய நிறத்தையும் கோலத்தையும் பெயரையும் உருவையும் இவையிவையென்று ஞானச் சமயிகள் பேசுகின்றனான்றோ? அப்படியிருக்க ‘எண்ணுமிடத்ததுவோ?’ என்று எங்ஙனே சொல்லலாம்? என்று எழுந்த ஆக்ஷேபத்திற்கு விடை கூறுவது போலும் இப்பாட்டு; அவர்களும் அவன் பெருமையைச் சிறிது சிறிது கண்டதேயன்றி முடியக் காணப்பெற்றாரில்லை எனப்பட்டது.

‘அறவியல் ஞானச் சமயிகள்’ என்றவிடத்து ‘அறம் முயல்’ எனப் பிரிக்காமல் ‘அற’ என்றே எடுத்து ‘மிகவும் முயன்று பெற்ற’ என்றும் பொருளுரைக்கலாம். (அற – மிகவும்.)

ஆழ்வார் தமக்கு ஸேவைதந்த ஸர்வேச்வரனுடைய மஹிமை எவ்வளவு ஞானம் கைவந்தவர்க்கும் முற்றிலும் உணரப்பெறாததென்று உண்மையுரைத்தாராயிற்று. ஸ்வயத்நத்தாலே அறிவோமென்பார்க்கு அறியமுடியாததாய் அளவிட வொண்ணாகதான தன் பெருமையைப் பரமகிருபையாலே தமக்கு விளங்கச் செய்த உகாரத்தைக் கருதி எம்பிரான் என்றார்.

நிறமுயர்கோலமும் பேரு முருவும்- நிறமாவது- “முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற, பிள்ளைவண்ணங் கொண்டல்வண்ணம்” இத்யாதிகளிற் சொல்லப்பட்ட வெண்மை கருமை முதலியன. கோலமாவன- ஸ்ரீகௌஸ்துபமணி முதலியன. பேர்- ஸஹஸ்ரநாமங்கள். உரு- மத்ஸ்ய கூர்மாதி ரூப பேதங்கள்….

English Translation

Even the learned votaries of religious texts that speak of the lord’s hue, his jewels, his names and his forms as this and this, only catch glimpses of that supreme knowledge which stands as a radiant beacon, but can never attain even a little of that glory-flood, Alas!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top