(2440)
அன்பாவாய் ஆரமுதம் ஆவாய், அடியேனுக்
கின்பாவாய் எல்லாமும் நீயாவாய், – பொன்பாவை
கேள்வா கிளரொளியென கேசவனே, கேடின்றி
ஆள்வாய்க் கடியேன்நான் ஆள்.
பதவுரை
|
அன்பு ஆவாய் |
– |
(என் பக்கல்) ப்ரீதியே வடிவெடுத்தவன் போலிருப்பவனே! |
|
ஆர் அமுதம் ஆவாய் |
– |
பரமபோக்யனாயிருப்பவனே! |
|
அடியேனுக்கு இன்பு ஆவாய் |
– |
(உன்னுடைய அநுபவமாகிய) ஸுகத்தை அடியேனுக்கு உண்டாக்கினவனே! |
|
என் கேசவனே |
– |
எம்பெருமானே! |
|
கேடு இன்றி |
– |
ஒருகுறையுமில்லாமல் |
|
ஆள்வாய்க்கு |
– |
ரக்ஷிக்கவல்லவுனுக்கு |
|
எல்லாமும் நீ ஆவாய் |
– |
மற்றுமுள்ள ஸுகங்களு மெல்லாம் எனக்கு நீயேயா யிருப்பவனே! |
|
பொன் பாவை கேள்வா |
– |
திருமகள் நாதனே! |
|
கிளர் ஒளி |
– |
(அத்திருமகளின் சேர்த்தியினால்) கொழுந்து விட்டு வளர்கின்ற காந்தியையுடைய |
|
நான் அடியேன் |
– |
நான் அடிமைப் பட்டவனா யிருக்கிறேன் |
|
ஆள் |
– |
(அடியேனைக் காத்தருள்) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- திருமாலே! உன்னைத் தவிர்த்து மற்ற தெய்வங்களுக்கு ஆடபட்டால் அவர்கள் ரக்ஷிக்கமாட்டாததோடு கெடுதல்களையும் விளைத்திடுவர்கள், நீயோ அப்படியல்லாமல் ஒரு கெடுதலுமின்றி ஆளவல்லை, ஆகவே நான் உனக்கு அடிமைப்பட்டவனானேன், காத்தருளாய் என்கிறார்.
அன்பு ஆவாய் – “அன்பு“ என்பது வேறொன்றாய், அதை நீ உடையவனாயிருக்கின்றாய் எனறு சொல்லவேண்டாமல், நீயே அன்புதானாக வடிவெடுத்திருக்கின்றாய் என்கை. என்பக்கல் அளவற்ற அன்புவைத்திருக்கின்றாயென்றவாறு. ஆரமுதமாவாய் இன்பாவாய் – தாய் தந்தையராலுண்டாகு மாநந்தம், மக்களாலுண்டாகுமாந்தம், மனைவியாராலுண்டாகு மாநந்தம், மக்களாலுண்டாகுமாநந்தம், மனைவியாராலுண்டாகு மாநந்தம் முதலிய எல்லா ஆனந்தங்களையும் உன்னநுபவத்தால் நானைடைகின்றேனென்கை. இப்படியெல்லாம் நீ ஆநந்தகரனாயிருப்பதற்குக் காரணம் லக்ஷமீபதித்வமே யென்கைக்காகப் பொன்பாவை கேள்வா! என விளித்தார். பிராட்டியைச் சொல்லும் வேகம் “***“ என்றும் “***“ என்றும் சொன்னதற்கேற்பப் பொன்பாவையென்றார். பிராட்டியைக் கைப்பிடித்ததனால் ஒரு விலக்ஷணமான தேஜஸ்ஸு விளைகின்றதென்பது தோன்ற “பொன்பாவை கேள்வா கிளரொளி“ என்றார். “***“ என்ற மாரீசவசநமும் காண்க.
ஆள் என்பதை முன்னிலை வினைமுற்றாக கொள்ளாமல், அடியேன்நான் – அடியேனாகிய நான் ஆள் – ஆட்பட்டேன் என்பதாகவுங் கொண்டுரைக்கலாம்.
English Translation
O Lord of lotus-dame Lakshmi My radiant kesava! You are my love! You are my ambrasial you are sweet me! You are my all you rule me without a fault! I am your humble servant.
