(2421)

(2421)

வெற்பென்று வேங்கடம் பாடினேன், வீடாக்கி

நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன், – கற்கின்ற

நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்,

கால்வலையில் பட்டிருந்தேன் காண்.

 

பதவுரை

வெற்பு என்று

பலமலைகளையும் சொல்லிவருகிற அடைவிலே

வேங்கடம் பாடினேன்

திருமலையையும் சொன்னவானானேன்; (இந்த உக்தி மாத்திரத்திலே)

விடு ஆக்கி நிற்கின்றேன்

‘மோஷம் நமக்கு ஸித்தம்‘ என்னும் படியாக அமைந்தேன்

நின்று நினைக்கின்றேன்

‘நாம் சொன்ன ஒரு சிறிய சொல்லுக்குப பெரிய பேறு கிடைத்த பாக்கியம் என்னோ!‘ என்று நினைத்து ஸ்தப்தனாயிருக்கின்றேன்,

கற்கின்ற

ஓதப்படுகிற

நூல்

வேதங்களாகிற சாஸ்த்ரங்களில்

வலையில் பட்டிருந்த

வலையினுள் அகப்பட்டிருப்பது போல் நிலை பேராமல் நிற்கின்ற

நூலாட்டி கேள்வனார்

லக்ஷ்மீநாதனான எம்பெருமானுடைய

கால் வலையில் பட்டிருந்தேன்

திருவடிகளாகிற வலையிலகப்பட்டுத் தரித்துநிற்கின்றேன்.

காண் – முன்னிலையசை

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வெற்பென்று வேங்கடம் பாடினேன் – ‘மலை‘ என்று வருகிற பெயர்களையெல்லாம் அடுக்காகச் சொல்லுவோமென்று விநோதமாக முயற்சிசெய்து ‘பசுமலை, அடைவிலே பறங்கிமலை‘ என்று பலவற்றையும் சொல்லிவருகிற அடைவிலே என்னையுமறியாமல் ‘திருவேங்கடமலை‘ என்று என்வாயில் வந்துவிட்டது, இவ்வளவையே கொண்டு எம்பெருமான் என்னைத் திருவேங்கடம் பாடினவனாகக் கணக்குசெய்து கொண்டானென்பது இதன் கருத்து.

வீடாக்கி நிற்கின்றேன் – யாத்ருச்சிகமான இந்த உத்திமாத்திரத்தில் “மீட்சியின்றி வைகுந்தமாநகர் மற்றதுகையதுவே“ என்னும்படியாகப் பரமபதமும் ஸித்தமென்னப் பேறுபெற்றயனாயினேன் என்கை.

நின்று நினைக்கிறேன் – நாம் புத்திபூர்வமாக ஒரு நல்ல சொல்லும் சொல்லாதிருக்கவும் எம்பெருமான்றாளே மடிமாங்காயிட்டு திருவுள்ளம் பற்றுகிறவிது என்ன ஆச்சரியம்! என்று இதனையே அநுஸந்தித்து ஈடுபடா நின்றேனென்கை.

கற்கின்ற நூல்வலையிற்பட்டிருந்த நூலாட்டி கேள்வனார் கால் வலையிற் பட்டிருந்தேன் – எம்பெருமான் ஸகலசாஸ்த்ரங்களாலும் பிரதிபாதிக்கப்படுபவனாதலால் அவனுக்கு ‘நூலாளன்‘ என்று பெயர் இப்பெயர்க்குப் பெண்பால் ‘நூலாட்டி‘ என்பதாம். (பெரிய பிராட்டியாரே! வேதங்களும் வேதாங்கங்களும் எல்லாங்கூடி உமது திருக்கல்யாண குணங்களையே பிரதிபாதிப்பனவாகப் பெரியோர் கூறுவர்) என்று பட்டர் அருளிச்செய்தபடியே எல்லா நூல்களையும் தனக்குப் பிரதிபாதகமாகவுடையவள் என்ற காரணத்தினாலும் ‘நூலாட்டி‘ என்று பெயர் பெறுவள் பிராட்டி, அவளுடைய கேள்வனார் – எம்பெருமான், அவன் எப்படிப்பட்டவனென்றால் கற்கின்ற நூல்வலையிற் பட்டிருந்தவன், (அதாவது) பரம்பரையாக அஸ்மதாதிகளால் ஓதப்பட்டுவருகின்ற சாஸ்த்ரங்களாகிற வலையிலே பாஹ்யகுத்ருஷ்டிகளால் அசைக்க வொண்ணாதபடி அகப்பட்ட எம்பெருமானுடைய திருவடிகளாகிய வலையிலே நான் சிக்கிக் கொண்டிருக்கின்றேன் என்கை.

மூன்றாமடியில் சாஸ்த்ரங்களை எம்பெருமானுக்கு வலையாகவும், ஈற்றடியில் அவ்வெம்பெருமான் திருவடிகளைத் தமக்கு வலையாகவும் அருளிச்செய்தார், எம்பெருமானை சாஸ்த்ரங்களில் நின்றும் எப்படி பிரிக்கமுடியாதோ அப்படியே என்னை அப்பெருமான் திருவடிகளில் நின்றும் பிரிக்கமுடியாது என்றவாறு, எம்பெருமான் ஒருவலையிலே அகப்பட்டான், நானொருவலையிலே அகப்பட்டேன் என்று சமத்காரமாகச் சொல்லுகிறபடி.

நான் அஹ்ருதயமாகச் சொன்ன சொல்லையும் அவன் ஸஹ்ருதயமாகக் கொண்டு மடிமாங்காயிட்டு என்னை விஷயீகரித்தருளாகிறானாகையாலே நான் அவனுடைய திருவடிகட்கே அற்றுத் தீர்ந்தே னென்றாராயிற்று.

 

English Translation

I keep calling to see the Lord of Venkatam, and draw the mystic circle kudat, to see if I may join him.  He resides on the hill where mountain streams spill sparking gems that elephants fear and withdraw prey to snakes.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top