(2401)
நீயே யுலகெலாம் நின்னருளே நிற்பனவும்
நீயே தவத்தேவ தேவனும் – நீயே
எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும், அண்டத்
திருசுடரு மாய இவை,
பதவுரை
|
உலகு எல்லாம் நீயே |
– |
உலகங்கட்கெல்லாம் நிர்வாஹகன் நீயே, |
|
நிற்பனவும் |
– |
உலகங்கள் ஸத்தைபெற்று நிற்பதும் |
|
நின் அருளே |
– |
உனது கிருபையினாலேயாம், |
|
தவம் தேர் தேவனும் நீயே |
– |
தவத்தினால் தேவர்களான பிரமன் முதலியோருக்குத் தலைவனும் நீயே, |
|
எரி சுடரும் |
– |
ஜவுலிக்கின்ற அக்நியும் |
|
மால்வரையும் |
– |
பெரியகுலபர்வதங்களும் |
|
எண் திசையும் |
– |
எட்டுத் திசைகளிலுமுள்ள ஸகல பதார்த்தங்களும் |
|
அண்டத்து |
– |
ஆகாசத்திலுள்ள |
|
இரு சுடரும் |
– |
சந்த்ர ஸூர்யர்களும் |
|
ஆய இவை |
– |
ஆகிய இவையெல்லாம் |
|
நீயே |
– |
நீயேகாண். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஸகலமும் எம்பெருமானாகவே யிருக்கும்படியை யருளிச் செய்கிறாரிதில். “உலகெல்லாம் நீயே“ என்றது – உலகமெல்லாம் உன்னுடைய ஆளுகையில் அடங்கியுள்ளது என்றபடி. நிற்பனவும் நின்னருளே – அவ்வப்பொருள்கள் அழியாதே ஸத்தை பெற்றிருப்பதும் நித்யமாயிருப்பதும் உன்னருளாலே. தவத் தேவ தேவனும் நீயே – எவ்வளவோ தவங்கள் செய்து ப்ரஜாபதி யென்றும் பசுபதியென்றும் பேர்பெற்றிருக்கும் தேவர்கட்கும் தேவன் நீ; யாம் கடவுளென்றிருக்கு மெவ்வுலகிற் கடவுளர்க்கும் ஆங்கடவுள் நீ என்றவாறு.
English Translation
O Lord! All the Universe is you, the sentient beings, are you. The austerit-god Siva, and his god Brahma to, are you. Fire, the mountains, the eight Quarters, the twin orbs, -all these are you.
