(239)

(239)

மிடறு மெழுமெழுத் தோட வெண்ணெய் விழுங்கிப்போய்

படிறு பலசெய்துஇப் பாடி யெங்கும் திரியாமே

கடிறு பலதிரி கா னதரிடைக் கன்றின்பின்

இடறஎன் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே.

பதவுரை

என் பிள்ளையை

என் மகனாகிய கண்ணபிரானை
வெண்ணெய்

வெண்ணெயை
மிடறு

கழுத்திலே
மெழுமெழுத்து ஓட

(உறுத்தாமல்) மெழுமெழுத்து ஓடும்படி
விழுங்கி

விழுங்கி விட்டு
போய்

(பிறரகங்களுக்குப்) போய்
பலபடிறு

பல கள்ள வேலைகளை
செய்து

செய்து கொண்டு
இ பாடி எங்கும்

இவ்விடைச்சேரி முழுதும்
திரியாமே

திரியவொட்டாமல்
பலகடிறு திரி

பல காட்டானைகள் திரியப்பெற்ற
கான் அதர் இடை

காட்டு வழியிலே
இடற

தட்டித்திறியும்படியாக

கன்றின் பின் போக்கினேன் ;

எல்லே பாவமே!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இலட்டுவும் சீடை முதலான பணியாரங்களைப் புஜிக்கவேண்டுமானால் கல் உண்டோவென்று  சோதித்து மெதுவாகக் கடித்துண்ணவேணும்; வெண்ணெயாகையால் வருத்தமின்றி மெழுமெழென்று உள்ளே இழியுமே; ஆகையால் அதனை விழுங்குவன் என்க. பலபடிறு செய்கையாவது கச்சொடு பட்டைக்கிழித்துக் காம்புதுகிலவை கீறுகை;* பந்துபறித்துத் துகில்பற்றிக் கீறுகை. களிறு என்றசொல் எதுகையின்பம் நோக்கிக் கடிறு எனவந்தது; டகரப்போலி;  ///////// என்பார் வட நூலார்.

English Translation

My child would gulp butter down his throat and roam this cowherd settlement doing wicked things. Instead I sent him after the grazing calves, with faltering steps down the forest path, where did wild elephants roam. O, why did I do such a wicked thing?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top