(239)
மிடறு மெழுமெழுத் தோட வெண்ணெய் விழுங்கிப்போய்
படிறு பலசெய்துஇப் பாடி யெங்கும் திரியாமே
கடிறு பலதிரி கா னதரிடைக் கன்றின்பின்
இடறஎன் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே.
பதவுரை
| என் பிள்ளையை |
– |
என் மகனாகிய கண்ணபிரானை |
| வெண்ணெய் |
– |
வெண்ணெயை |
| மிடறு |
– |
கழுத்திலே |
| மெழுமெழுத்து ஓட |
– |
(உறுத்தாமல்) மெழுமெழுத்து ஓடும்படி |
| விழுங்கி |
– |
விழுங்கி விட்டு |
| போய் |
– |
(பிறரகங்களுக்குப்) போய் |
| பலபடிறு |
– |
பல கள்ள வேலைகளை |
| செய்து |
– |
செய்து கொண்டு |
| இ பாடி எங்கும் |
– |
இவ்விடைச்சேரி முழுதும் |
| திரியாமே |
– |
திரியவொட்டாமல் |
| பலகடிறு திரி |
– |
பல காட்டானைகள் திரியப்பெற்ற |
| கான் அதர் இடை |
– |
காட்டு வழியிலே |
| இடற |
– |
தட்டித்திறியும்படியாக |
|
கன்றின் பின் போக்கினேன் ; |
||
|
எல்லே பாவமே! |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இலட்டுவும் சீடை முதலான பணியாரங்களைப் புஜிக்கவேண்டுமானால் கல் உண்டோவென்று சோதித்து மெதுவாகக் கடித்துண்ணவேணும்; வெண்ணெயாகையால் வருத்தமின்றி மெழுமெழென்று உள்ளே இழியுமே; ஆகையால் அதனை விழுங்குவன் என்க. பலபடிறு செய்கையாவது கச்சொடு பட்டைக்கிழித்துக் காம்புதுகிலவை கீறுகை;* பந்துபறித்துத் துகில்பற்றிக் கீறுகை. களிறு என்றசொல் எதுகையின்பம் நோக்கிக் கடிறு எனவந்தது; டகரப்போலி; ///////// என்பார் வட நூலார்.
English Translation
My child would gulp butter down his throat and roam this cowherd settlement doing wicked things. Instead I sent him after the grazing calves, with faltering steps down the forest path, where did wild elephants roam. O, why did I do such a wicked thing?
