(2278)
எங்கள் பெருமான் இமையோர் தலைமகன்நீ,
செங்க ணெடுமால் திருமார்பா, – பொங்கு
படமூக்கி னாயிரவாய்ப் பாம்பணைமேல் சேர்ந்தாய்,
குடமூக்கில் கோயிலாக் கொண்டு.
பதவுரை
|
செம் கண் நெடுமால் |
– |
சிவந்த திருக்கண்களையுடைய ஸர்வேச்வரனே! |
|
திருமார்பா |
– |
பிராட்டியைத் திருமார்பிலுடையவனே! |
|
இமையோர் தலை மகன் நீ |
– |
நித்யஸூரிகளுக்குத் தலைவனான நீ |
|
எங்கள் பெருமான் |
– |
எங்களுக்கு ரக்ஷகனாய்க் கொண்டு |
|
குடமூக்கு இல் |
– |
கும்பகோக் க்ஷேத்ரத்தை |
|
கோயில் ஆ கொண்டு |
– |
கோயிலாகத் திருவுள்ளம்பற்றி |
|
பொங்கு படம் மூக்கின் |
– |
விகஸித்தபடங்களையும் மூக்கையுமுடையவனும் |
|
ஆயிரம் வாய் |
– |
ஆயிரம் வாயையுடையவனுமான |
|
பாம்பு |
– |
ஆதிசேஷனாகிற |
|
அணை மேல் |
– |
படுக்கையின் மீது |
|
சேர்ந்தாய் |
– |
பள்ளி கொண்டருளினாய். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமானே! என்போன்ற அடியார்களை விஷயீ கரிப்பதற்காகவன்றோ திருக்குடந்தையிலே வந்து சாய்ந்தருளா நின்றாய் என்கிறார்.
‘கும்பகோணம்‘ என்ற வடசொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் குடமூக்கு என்பதாம். (கும்பம் –குடம், கோணம் –மூக்கு) இல் –க்ருஹம்.
English Translation
O Lord! You are the monarch of even the gods. O Senikanmal, with lotus-dame lakshmi on your chest! You recline on a thousand-hooded snake. You reside in the temple of kudandai.
