(2275)
உற்று வணங்கித் தொழுமின், உலகேழும்
முற்றும் விழுங்கும் முகில்வண்ணம், – பற்றிப்
பொருந்தாதான் மார்பிடந்து பூம்பா டகத்துள்
இருந்தானை, ஏத்துமென் நெஞ்சு.
பதவுரை
|
உலகு எழும் முற்றும் விழுங்கும் |
– |
உலகங்களை யெல்லாம் (பிரளயங்கொள்ளாதபடி) அமுது செய்தவனும் |
|
முகில் வண்ணன் |
– |
மேகம் போன்ற வடிவையுடையவனும் |
|
பொருந்தா தான் |
– |
(ப்ரஹ்லாதனுக்கு) சத்ருவான் இரணியனுடைய |
|
மார்பு |
– |
மார்வை |
|
பற்றி |
– |
பிடித்து |
|
இடந்து |
– |
கிழித்தவனும் |
|
பூ பாடகத்துள் இருந்தானை |
– |
அழகிய திருப்பாடகமென்னுந் திருப்பதியில் வீற்றிருப்பவனுமான எம்பெருமானை |
|
என் நெஞ்சு |
– |
என் மனமானது |
|
ஏத்தும் |
– |
துதிக்கும் (நீங்களும் இப்படியே) |
|
உற்று வணங்கி தொழுமின் |
– |
பொருந்தி வணங்கி ஆச்ரயியுங்கோள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பண்டொருகால் உலகமெல்லாம் பிரளயப்பெருங்கடலிலே அழிந்து போவதாயிருக்கையில் அவற்றையெல்லாம் திருவயிற்றிலே யெடுத்துவைத்தடக்கிக் காத்தருளின சிரமம் தீரவும், ப்ரஹ்லாதாழ்வானைப் பாதுகாத்தருளவேண்டி இரணியன் மார்பிடந்த சிரமம் தீரவும் கச்சிநகரில் திருப்பாடகமென்னுந் திருப்பதியில் இனிதாக எழுந்தருளியிருக்கு மெம்பெருமானை என்நெஞ்சு ஏத்துகின்றது, நீங்களும் அவனையே வணங்கி வாழுங்கள் என்று உலகத்தவர்க்கு உபதேசித்தாராயிற்று.
பாடகம் –பெரியகாஞ்சீபுரத்திலுள்ள பாண்டவதூதர் ஸந்நிதி. ‘பாடு அகம்‘ என்று பிரிக்க. பெருமைதோற்ற எழுந்தருளியிருக்கும். தலம் என்கை. கண்ணன் பாண்டவதூதனாய்த துரியோதனனிடஞ் சென்றபொழுது துர்யோதநன் ரஹஸ்யமாகத் தனது ஸபாமண்டபத்தில் மிகப்பெரிய நிலவறையொன்றைத் தோண்டுவித்து அதில் அனேகமல்லர்களை ஆயுதபாணிகளாய் உள்ளேயிருக்கவைத்து அப்படுகுழியைப் பிறர் அறியவொண்ணாதபடி மூங்கிற்பிளப்புகளால் மேலேமூடி அதன்மேற் சிறந்த ரத்நாஸநமொன்றை அமைத்து அவ்வாஸனத்தில் கண்ணனை வீற்றிருக்கச் சொல்ல, அங்ஙனமே ஸ்ரீகிருஷ்ணன் அதன்மேல் ஏறினமாத்திரத்திலே மூங்கிற் பிளப்புக்கள் முறிபட்டு ஆசனம் உள்ளிறங்கிப் பிலவறையிற் செல்லுமளவில், அப்பெருமான் மிகப்பெரிதாக விச்வரூபமெடுத்துப் பல கைகளையும் கால்களையுங்கெண்டு எதிர்க்கவே, அப்பிலவறையிலிருந்த மல்லர்கள் அழிந்தனர். அப்போது கொண்ட விச்வரூபத்திருக்கோலத்திற்கு ஸ்மாரமாகப் பெரிய திருமேனியோடே ஸேவைஸாதிக்குமிடம் பாடகம். பாடு –பெருமை. (“அரவுநீள் கொடியோனவையுளாசனத்தை அஞ்சிடாதேயிட அதற்குப் பெரியமாமேனி அண்டமூடுருவப் பெருந்திசை யடங்கிட நிமிர்ந்தோன்“ என்ற பெரிய திருமொழிப்பாசுரத்தில் அநுஸந்திக்கப்பட்ட திருமேனிவளர்த்தியோடே ஸேவைஸாதிக்கு மாறுகாண்க.
English Translation
Offer worship with love. The cloud hued Lord who swallowed all the seven worlds, and detroyed the unrelenting Hiranya’s chest, resides in the beautiful city of Padakam. I offer praise with my heart.
