(2158)
வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும், அஃகாத
பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும், – நான்கிடத்தும்
நின்றா னிருந்தான் கிடந்தான் நடந்தானே,
என்றால் கெடுமாம் இடர்.
பதவுரை
| வேங்கடமும் |
– |
திருமலையும் |
| விண்ணகரும் |
– |
வைகுந்தமாநகரும் |
| வெஃகாவும் |
– |
திருவெஃகாவும் |
| அஃகாத பூ கிடங்கின் நீள் கோவல் பொன் நகரும் |
– |
பூ மாறாத நீர் நிலைகளையுடைய சிறந்த திருக்கோவலூ ரென்கிற திவ்ய தேசமும் |
|
(ஆகிய) |
||
| நான்கு இடத்தும் |
– |
நான்கு திருப்பதிகளிலும் |
|
(வரிசைக்கிரமமாக) |
||
| நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தான் என்றால் |
– |
(எம்பெருமான்) நிற்பதும் வீற்றிருப்பதும் பள்ளிகொண்டிருப்பதும் நடப்பதுமா யிருக்கிறா ரென்று அநுஸந்தித்தால் |
| இடர் |
– |
துக்கங்களெல்லாம் |
| கெடும் ஆம் |
– |
விட்டோடிப் போய்விடும் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமான் ஒவ்வொரு திவ்ய தேசத்திலும் எழுந்தருளியிருக்கிறபடிகளை நாம் அநுஸந்தித்தால் நமது இடரெல்லாம் நீங்கிவிடுமென்கிறார். அவன் திருப்பதிகளில் நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் நடப்பதுமானபடிகளை நாம் சொல்ல, நாம் நின்றுமிருந்தும் கிடந்தும் நடந்தும் செய்த பாபங்களெல்லாம் தன்னடையே போகுமென்றபடி. நூற்றெட்டுத் திருப்பதிகளுள் பரம பதமும் ஒன்றாதலால் இங்கு ‘விண்ணகரும்’ என்று அத்திருநாடு கூறப்பட்டது. உப்பிலியப்பன் ஸந்நிதி யென்கிற திருவிண்ணகரைச் சொல்லுவதாகக் கொண்டால் அங்கு வீற்றிருந்த திருக்கோலமில்லையாதலால் மிடிபடும். கச்சிமாநகரிலுள்ள பரமேச்சுர விண்ணகரைச் சொல்லுவதாகக் கொள்ளினும் குறையில்லை. உலகளந்த திருக்கோலமாக ஸேவை ஸாதிக்குமிடத்தை நடந்தகோலத்திருப்பதியாக அநுஸந்திப்பதுண்டாதலால் ‘பூங்கோவல் நடந்தான்’ என்றார்.
English Translation
In Venkatam He stands; In the glorious sky. He sits; in Vehka He reclines; In the bowered city of Kovalur, he strikes, Even saying this will end our suffering.
