(2149)

(2149)

உணர்வாரா ருன்பெருமை? யூழிதோ றூழி,

உணர்வாரா ருன்னுருவந் தன்னை?, உணர்வாரார்

விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால்வேதப்

பண்ணகத்தாய் நீகிடந்த பால்?

 

பதவுரை

விண்ணகத்தாய்

பரமபதத்திலெழுந்தருளியிருப்பவனே!

மண்ணகத்தாய்

இந்த மண்ணுலகில் திருவ்வதரிப்பவனே!

வேங்கடத்தாய்

திருமலையில் நின்றருள் பவனே!

பண் நால் வேதம் அகத்தாய்

ஸ்வரப்ரதானமான நான்கு வேதங்களாலும் அறியப்படுபவனே!

உன் பெருமை

(இப்படிப்பட்ட) உன்னுடைய பெருமையை

ஊழி தோறு ஊழி

காலமுள்ளதனையும்

(இருந்து ஆராய்ந்தாலும்)

உணர்வார் ஆர்

அறியக்கூடியவர் யாவர்?

உன் உருவம் தன்னை

உனது திவ்யாத்மஸ்வரூபத்தைத்தான்

உணர்வார் ஆர்

அறியக்கூடியவர் யாவர்?

நீ கிடந்த பால்

(ஆர்த்தரக்ஷணத்துக்காக ) நீ பள்ளி கொண்டிருக்கப் பெற்ற திருப்பாற்கடலைத்தான்

உணர்வார் ஆர்

அறிய  வல்லாரார்? [எவருமில்லை.]

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருமாலை யறிவதே அறிவு என்று கீழ்ப்பாட்டில் அருளிச்செய்த ஆழ்வார், அறிவுக்கு எல்லைநிலம் எம்பெருமானல்லது இல்லை என்னும்படியிருந்தாலும் அவன் தன்மை அறிவார்தான் இல்லை என்று இப்பாட்டிலருளிச் செய்கிறார். இவ்வாறிருப்பது வஸ்துவின்ஸ்வபாவமேயொழிய அறிவின் குறைவன்றென்பதும் அறியத்தக்கது.”உணர்வாரார்? ‘ என்ற வினாவினால் ஸர்வஜ்ஞ்னான உன்னாலும் உன் தன்மை அறியமுடியாதென்பதும் ஸூசிப்பிக்கப்படும் “ தனக்கும் தன் தன்மையறிவரியான்” என்றார் நம்மாழ்வாரும்.

 

English Translation

Who realises your glory? O Lord in the sky! O Lord on Earth! O Lord of Venkatam! O Lord of the four vedic chants! Who realises your forms? Who realises where you recline, age after every age?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top