(2129)

(2129)

கழலொன் றெடுத்தொருகை சுற்றியோர் கைமேல்,

சுழலும் சுராசுரர்க ளஞ்ச, – அழலும்

செருவாழி யேந்தினான் சேவடிக்கே செல்ல,

மருவாழி நெஞ்சே மகிழ்.

 

பதவுரை

ஆழி நெஞ்சே

கம்பீரமான மனமே!

[முன்பு திருவிக்ரமாவதார காலத்தில்]

ஒரு கழல்

ஒரு திருவடியை

எடுத்து

மேலுலகங்களிலே செல்ல நீட்டி

ஒரு கை

ஒரு திருக்கையாலே

சுற்றி

[பிரதிகூலரான நமுசி முதலானவர்களைச்] சுழற்றியெறிந்து

ஓர் கை மேல்

மற்றொரு திருக்கையிலே.

சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும்செரு ஆழி ஏந்தினான்

இவனுக்கு என்ன நேரிடுமோ வென்று) தவிக்கிற [அநுகூலரான] தேவர்களும் [பிரதிகூலரான] அசுரர்களும் அஞ்சும்படியாக [எதிரிகளின் மேல்] அழலையுமிழ்கிற யுத்தசாதநமான சக்கரத்தை ஏந்தின எம்பெருமானுடைய

சே அடிக்கே செல்ல

திருவடிகளிலே சென்று கிட்டும்படி

மருவு

பொருந்துவாயாக;

மகிழ்

இதை ஆனந்தரூபமாக ஏற்றுக்கொள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- உலகளந்த பெருமானுடைய திருவடிகளைப் பணிந்து மகிழ்ந்திரு என்று திருவுள்ளத்தைத் தேற்றுகின்றார்.

 

English Translation

With one foot, he scooped up Namushi; with one hand, swirled him in the air; then with the other hand he spun his discus that gods and Asuras around feared. O Good Heart of mine! Desire to attain his feet and rejoice.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top