(212)

(212)

வண்டுகளித் திரைக்கும் பொழில்சூழ்  வருபுனல் காவிரித் தென்ன ரங்கன்

பண்டவன் செய்த கிரீடை யெல்லாம் பட்டர் பிரான்விட்டு சித்தன் பாடல்

கொண்டிவை பாடிக் குனிக்க வல்லார் கோவிந்தன் தன்அடி யார்க ளாகி

எண்திசைக் கும்விளக் காகி நிற்பார் இணையடி என்தலை மேல னவே.

பதவுரை

வண்டு

வண்டுகளானவை
களித்து

(தேனைப்பருகிக்) களித்து
இரைக்கும்

ஆரவாரங்கள் செய்யப்பெற்ற
பொழில்

சோலைகளாலும்
வரு

(அச்சோலைகளுக்காகப் பெருகி) வாராநின்றுள்ள
புனல்

நீரையுடைத்தான
காவிரி

காவேரீ நதியான
சூழ்

சூழப்பெற்று
தென்

அழகிய
அரங்கன் அவன்

திருவரங்கத்தில் நித்யவாஸம் பண்ணுகிற வைபவத்தையுடையவனான அப்பெருமான்
பண்டு

(விபவமாகிய) முற்காலத்தில்
செய்த

செய்த
கிரீடை எல்லாம்

லீலாசேஷ்டி தங்களெல்லாவற்றையும் (விசேஷமாகக் கொண்டு)
விட்டு சித்தன் பட்டர்பிரான் பாடல்

விஷ்ணுவை நெஞ்சிற் கொண்டவராய் பிராஹ்மணோத்தமரான பெரியாழ்வார் (பாடின) பாடலாகிய
இவை கொண்டு

இப்பாட்டுக்களை (அநுஸக்தெயமாக்) கொண்டு
பாடி

(இப்பாசுரங்களை)பாடி

(அதனால் பக்தி மீதூர்ந்து உடம்பு இவ்விடத்தில் இராமல் விகாரமடைந்து)

குனிக்கவல்லார்

கூத்தாடவல்லவர்களாய்
கோவிந்தன் தன் அடியார்கள் ஆகி

கண்ணபிரானுக்கு அடியவர்களாய்
என் திசைக்கும்

எட்டு திக்குகளிலும் (உள்ள இருள் நீங்கும்படி)
விளக்கு ஆகி நிற்பார்

(அத்திக்குகளுக்கு) விளக்காக நிற்கும் அவர்களுடைய
இணையடி

திருவடிவினைகளானவை
என் தலைமேலான

என்னுடைய முடியின் மேல் வீற்றிருக்கத்தக்கவை

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பகவத் விஷயத்திலே நான் பேசின பாசுரங்களைப் பாடிப் பாடி உத்தம பாகவதர்களாய் எங்கும் புகழ் பெற்று விளங்கும் அவர்களது திருவடிகளை யான் முடிமேல் அணிவேன் என்பதாகும். “குருகூர்ச் சடகோபன் சொன்ன தீதிலாத வொண்டமிழ்க ளிவையாயிரத்து ளிப்பத்தும், ஓதவல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே”” என்று நம்மாழ்வர் பாசுரத்தை அடியேற்றிய தாமிது. இதனால் இத்திருமொழி கற்பாருடைய சிறப்பும் இவர்களிlத்த்தில் தமக்குள்ள கெளரவப்புத்தியும் தெரிவிக்கப்பட்டனவாம். “என் தலைமேலான” என்று வருவதனால் ‘பட்டபிரான் விட்டுச் சித்தன்’ என்பது தன்மையிற் படர்க்கை வந்த வழுமதியாம். மேலான-பலவின்பாற் குற்ப்பு முற்றிற்று.

English Translation

This decand of songs by Vishnuchitta, Pattarbiran, recalls the age-old pranks of the Lord of Srirangam surrounded by bee-humming groves watered by the sweetly-flowing Kaveri. Those who can sing it and dance will become Govinda’s devotees, masters of mine, and light of the eight Quarters.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top