(2102)

(2102)

நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்,

சென்று திசையளந்த செங்கண்மாற்கு, – என்றும்

படையாழி புள்ளூர்த்தி பாம்பணையான் பாதம்,

அடையாழி நெஞ்சே அறி.

 

பதவுரை

சென்று நின்று

(மஹாபலியின் யாகபூமியிற்) போய் நின்று

அம் கை

(தனது) அழகிய திருக்கையினால்

நிலம் நீரேற்று

பூமிதானம்வாங்கி

மூ அடியால்

மூன்றடிகளாலே

திசை அளந்த

எல்லாயிடங்களையும் ஸ்வாதீனப் படுத்திக்கொண்ட

செம்கண்மாற்கு

செந்தாமரைக் கண்ணனான எம்பெருமானுக்கு

என்றும்

எப்போதும்

ஆழி

சக்கரமானது

படை

ஆயுதமாயிருக்கும்;

புள்

கருடன்

ஊர்தி

வாஹனமா யிருப்பன்;

ஆழி நெஞ்சே

கம்பீரமான மனமே!

அறி

நான் சொல்வதை ஆராய்ந்துகொள்;

பாம்பு அணையான் பாதம் அடை

சேஷசயனனான அப்பெருமானுடைய திருவடிகளை அடைந்திடு.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- [நின்றுநிலமங்கை.] தம்முடைய திருவுள்ளத்தை நோக்கி எம்பெருமானுடைய  ஸெளசீல்யகுணத்தை உரைக்கின்றார். முன்னடிகளில் உலகளந்த வரலாற்றை எடுத்துரைத்ததன் கருத்து – இப்படிப்பட்ட அவனது மேன்மையைப் பார்த்து நெஞ்சே! நீ பின்வாங்கவேண்டா என்றவாறு. நம்முடைய விரோதிகளைத் தலைதுணிப்பதற்கு அப்பெருமான் கையுந்திருவாழியுமாயிருப்பவன்;நாம் இடர்பட்டால் நம்முடைய கூக்குரல் கேட்டவுடனே சடக்கென ஓடிவந்து நம்மைக் காப்பதற்குப் பாங்காகப் பெரிய திருவடியை வாஹனமாகவுடையவன் என்கிறார் என்றும் படையாழி புள்ளுர்தி என்பதனால்.

 

English Translation

Alas, O Dark Heart of mine! The Lord Senkanmal who went to Marbali and took a gift of land, then grew and measured the Earth, has a discus for weapon, a bird for vehicle and a serpent for a bed, You must attain his feet, know it.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top