(190)
அண்டத் தமரர்கள் சூழ அத்தாணி யுள்ளங்கி ருந்தாய்
தொண்டர்கள் நெஞ்சி லுறைவாய் தூமல ராள்மண வாளா
உண்டிட்டு உலகினை யேழும் ஓரா லிலையில் துயில்கொண்டாய்
கண்டுநான் உன்னை யுகக்கக் கருமுகைப் பூச்சூட்ட வாராய்.
பதவுரை
| அத்தாணியுள் |
– |
அருகான இடத்திலே (ஸேவிக்கும்படி) |
| அமர்ர்கள் |
– |
தேவர்கள் |
| சூழ |
– |
சூழ்ந்திருக்க |
| அங்கு |
– |
அவர்கள் நடுவில் |
| அண்டத்து |
– |
பரமபதத்தில் |
| இருத்தாய் |
– |
வீற்றிருப்பவனே! |
| தொண்டர்கள் |
– |
அடியார்களுடைய |
| நெஞ்சில் |
– |
ஹ்ருதயத்தில் |
| உறைவாய் |
– |
வஸிப்பவனே! |
| து மலரான் |
– |
பரிசுத்தமான தாமரை மலரைப் பிறப்பிடமாக வுடைய பிராட்டிக்கு |
| மணவாளா |
– |
கொழுநனே! |
|
(பிரளய காலத்தில்) |
||
| உலகினை ஏழும் |
– |
ஏழு உலகங்களையும் |
| உண்டிட்டு |
– |
உண்டுவிட்டு |
| ஓர் ஆல் இலையில் |
– |
ஒராவிலையில் |
| துயில் கொண்டாய் |
– |
யோக நித்திரையைக் கொண்டவனே! |
| நான் |
– |
நான் |
| உன்னை கண்டு |
– |
(நீ பூச்குடியதைப்) பார்த்து |
| உகக்க |
– |
மகிழும்படி |
| கருமுகைப்பூ |
– |
இருவாட்சிப் பூவை சூட்டவாராய் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பரமபதத்திலே ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்றிருப்பவனே! அவ்விருப்பைக் காட்டிலும் மிகவிரும்பி அன்பர்களின் நெஞ்சிலே யெழுந்தருளியிருப்பவனே! லக்ஷ்மீநாதனே! உலகங்களைப் பிரளயங் கொள்ளாதபடி வயிற்றிலே கொண்டு காப்பவனே! மாலையும் மயிர்முடியுமாக உன்னை நான் கண்டு களிக்குமாறு கருமுகைப்பூச் சூடவரவேணு மென்கிறாள்.
English Translation
O Lord seated in Vaikuntha surrounded by resident eternals, Lord living in the hearts of devotees1 o Bridegroom of the pure lotus-dame Lakshmi, you swallowed the seven worlds and slept as a child on a floating fig leaf! Come and wear these Karumukai flowers.
