(190)

(190)

அண்டத் தமரர்கள் சூழ அத்தாணி யுள்ளங்கி ருந்தாய்

தொண்டர்கள் நெஞ்சி லுறைவாய் தூமல ராள்மண வாளா

உண்டிட்டு உலகினை யேழும் ஓரா லிலையில் துயில்கொண்டாய்

கண்டுநான் உன்னை யுகக்கக் கருமுகைப் பூச்சூட்ட வாராய்.

பதவுரை

அத்தாணியுள்

அருகான இடத்திலே (ஸேவிக்கும்படி)
அமர்ர்கள்

தேவர்கள்
சூழ

சூழ்ந்திருக்க
அங்கு

அவர்கள் நடுவில்
அண்டத்து

பரமபதத்தில்
இருத்தாய்

வீற்றிருப்பவனே!
தொண்டர்கள்

அடியார்களுடைய
நெஞ்சில்

ஹ்ருதயத்தில்
உறைவாய்

வஸிப்பவனே!
து மலரான்

பரிசுத்தமான தாமரை மலரைப் பிறப்பிடமாக வுடைய பிராட்டிக்கு
மணவாளா

கொழுநனே!

(பிரளய காலத்தில்)

உலகினை ஏழும்

ஏழு உலகங்களையும்
உண்டிட்டு

உண்டுவிட்டு
ஓர் ஆல் இலையில்

ஒராவிலையில்
துயில் கொண்டாய்

யோக நித்திரையைக் கொண்டவனே!
நான்

நான்
உன்னை கண்டு

(நீ பூச்குடியதைப்) பார்த்து
உகக்க

மகிழும்படி
கருமுகைப்பூ

இருவாட்சிப் பூவை சூட்டவாராய்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பரமபதத்திலே ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்றிருப்பவனே! அவ்விருப்பைக் காட்டிலும் மிகவிரும்பி அன்பர்களின் நெஞ்சிலே யெழுந்தருளியிருப்பவனே! லக்ஷ்மீநாதனே! உலகங்களைப் பிரளயங் கொள்ளாதபடி வயிற்றிலே கொண்டு காப்பவனே! மாலையும் மயிர்முடியுமாக உன்னை நான் கண்டு களிக்குமாறு கருமுகைப்பூச் சூடவரவேணு மென்கிறாள்.

English Translation

O Lord seated in Vaikuntha surrounded by resident eternals, Lord living in the hearts of devotees1 o Bridegroom of the pure lotus-dame Lakshmi, you swallowed the seven worlds and slept as a child on a floating fig leaf! Come and wear these Karumukai flowers.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top