(19)

(19)

வாயுள் வையகம் கண்ட மடநல்லார்

ஆயர் புத்திர னல்லன் அருந்தெய்வம்

பாய சீருடைப் பண்புடைப் பாலகன்

மாய னென்று மகிழ்ந்தனர் மாதரே.

பதவுரை

வாயுள்

(பிள்ளையின்) வாயினுள்ளே
வையகம்

உலகங்களை
கண்ட

ஸாக்ஷாத்கரித்த
நல் மடவார்

வைல்க்ஷண்யத்தையும் மடப்பத்தையுமுடைய
மாதர்

ஸ்த்ரீகளானவர்கள், (‘‘இவன்)
ஆயர் புத்திரன் அல்லன்

இடைப்பிள்ளை யல்லன்
அரு தெய்வம்

பெறுதற்கரிய தெய்வம்,
பாய சீர் உடை

பரம்பின புகழையுடையனும்
பண்பு உடை

குணங்களை யுடையனுமான
பாலகன்

(இந்த) சிறுப்பிள்ளையானவன்
மாயன்

ஆச்சர்யசக்தியுக்தன்’’
என்று

என்று (ஒருவர்க்கொருவர்) சொல்லிக்கொண்டு
மகிழ்ந்தனர்

ஆநந்தித்தார்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – கண்ணனுடைய வாயில் ஸகல லோகங்களையுங்கண்ட யசோதையானவள் ஆநந்தத்தாலே மற்றுமுள்ள பெண்டுகளையும் அழைத்துக்காட்ட, கண்ணபிரான் அவர்களுக்கும் அருள்கூர்ந்து அப்படியே காட்டிக்கொடுக்க, அப்பெண்களெல்லாரும் யசோதையைப் போலவே கண்ணன் வாயில் ஸகல லோகங்களையுங் கண்டு ஆச்சரியப்பட்டு, ‘இவன் ஸாமாந்யனான இடைப்பிள்ளையல்லன்; ஸாக்ஷாத் பரமபுருஷனே இப்படிவந்து அவதரித்தானாக வேணும்’ என்று கொண்டாடிக் கூறினார்கள்.

English Translation

When the other good ladies saw the Universe in his mouth, they exclaimed with glee, “this is no ordinary cowherd-child, but the blessed Lord himself, endowed with all the auspicious qualities”.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top