(1871)
மணங்கள் நாறும் வார்குழ லார்கள் மாதர்க ளாதரத்தை
புணர்ந்த சிந்தைப் புன்மை யாளன் பொன்ற வரிசிலையால்
கணங்க ளுண்ண வாளி யாண்ட காவல னுக்கிளையோன்
குணங்கள் பாடி யாடு கின்றோம் குழமணி தூரமே.
பதவுரை
|
மணங்கள் நாறும் வார் குழலால் மாதர்கள் |
– |
பரிமளம் மிக்க நீண்ட கூந்தளையுடையரான ஸ்த்ரீகள் விஷணத்திலே |
|
ஆதரத்தை புணர்ந்த சிந்தை |
– |
ஆசையை ஒருபோதும் விடாத நெஞ்சையுடையனாய் |
|
புன்மை யாளன் |
– |
மிகவும் நீசனான இராவணன் |
|
பொன்ற |
– |
முடியும்படியாகவும் |
|
கணங்கள் உண்ண |
– |
பிசாசுகள் ஏறிப் புசிக்கும்படியாகவும் |
|
வரி சிலையால் |
– |
அழகிய வில்வழியாக |
|
வாளி ஆண்ட |
– |
அம்புகளைப் பிரயோகித்த |
|
காவலனுக்கு |
– |
ஸர்வாக்ஷகரான பெருமாளுடைய |
|
இளையோன் |
– |
திருத்தம்பியாரான லக்ஷ்மணருடைய |
|
குணங்கள் பாடி |
– |
திருக்குணங்களைப் பாடிக்கொண்டு |
|
குழமணிதூரம் ஆடுகின்றோம். |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஸ்த்ரசாபல்யத்தை மேற்கொண்டதனால் நீசர்களில் முதல்வனாகக் கணக்கிடப்பெற்ற இராவணன் முடிந்துபொகும்படியாகவும் அவனுடலைக் கபுக்கள் முதலியவை ஏறியுண்ணும்படியாகவும் வில்லிலே அம்பைத்தொடுத்த பெருமாளுக்குத் தம்பியாய் ;இளையபெருமாள்; என வழங்கப்படுபவரான லக்ஷ்மணருடைய திருக்குணங்களைப் பாடிக்கொண்டு குழமணிதூர மாடுகின்றோமென்கிறார்கள். ;மணங்கள் நாறும்வார்குழலார் என்றது சிந்தை – ஸ்த்ரீவிஷயமான காதலைக்கொண்ட நெஞ்சுவாய்ந்தவன் என்றபடி.
English Translation
Our lowly king Ravana, obsessed with throughts of company with fragrant-coiffured dames was fed to the elements by the great bow-wielder Rama;s arrows. We sing his younger brother Lakshmanai;s praise, we dance the Kulamani Duram
