(1857)

(1857)

பெற்றம் ஆளியை பேரில் மணாளனை

கற்ற நூல்கலி கன்றி யுரைசெய்த

சொற்றி றமிவை சொல்லிய தொண்டர்கட்கு

அற்ற மில்லையண் டம்அவர்க் காட்சியே.

 

பதவுரை

பெற்றம் ஆளியை

பசுக்களை ஆளப்பிறந்தவனும்

பேரில்

திருப்பேர் நகரில்

மணளனை

மணவாளப்பிள்ளையாக ;ஸேவை ஸாதிப்பவனுமான பெருமான் விஷயமாக,

நூல் கற்ற கலிகன்றி உரைசெய்த

நூல்களைப் பயின்ற திருமங்கையாழ்வார் அருளிச்செய்த

சொல் திறம் இவை

இந்த சப்தராசியை

சொல்லிய தொண்டர் கட்கு

ஓதுகின்ற பாகவதர்களுக்கு

அற்றம் இல்லை

(கைங்கரியத்திற்கு) இடையூறு (ஒருநாளும்) இல்லையாம்.

அவர்க்கு அண்டம் ஆட்சி

அவர்களுக்குப் பரமபதம் ஆளவுரியதாம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வியாக்கியானத்தில், ‘பெற்றமாளிகை’ என்றும் ‘பெற்றமாளியை’ என்றும் பாடபேதங் கொள்ளப்பட்டது. முந்தினபாடத்தில், ‘பெற்றம்’ என்று பெருமையாய், பெருமைபொருந்திய மாளிகையுடைத்தான திருப்பேர்நகரிலுறையு மெம்பெருமானை என்றதாகிறது. பிந்தினபாடத்தில், ‘பெற்றம்’ என்று பசுக்களுக்குப் பெயராய், கோபாலனாகையாலே பசுக்களை ஆள்பவனும் திருப்பேர் நகரிலுள்ளவனுமான பெருமானை என்றதாகிறது.

கற்ற நூல்கலிகன்றி – ஆழ்வார் எம்பெருமானால் மயர்வறமதிநல மருளப்பெற்றவரேயன்றி ஒருவரிடத்திலே சாஸ்த்ராப்யாஸம் செய்தவரல்லரே, அப்படியிருக்க ‘கற்றநூல்கலிகன்றி’ என்றது எங்ஙனே; என்கிற கங்கைக்கு ஸமாதாநமாகப் பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்வது காண்மின், – “திருமந்த்ரம் கற்றவிடத்தலே கற்குமித்தனையிறே அல்லாதவையும்“ என்று ஸகலசாஸ்த்ரங்களும் திருமந்திரத்தில் அடங்கினவையாதலால் அத்திருமந்திரத்தை எம்பெரமான் பக்கதில் கற்றபோதே ஸகலசாஸ்த்ரங்களும் கற்கப்பட்டனவாதலால் இங்ஙனஞ் சொல்லக்குறையில்லை யென்க.

 

English Translation

This is a garland of songs in praise for the bridegroom of Tirupper, the Lord who grazed cows, sung by the well-learned Kalikanri. Those who master it will have no despair, they shall rule the skies as well

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top