(1828)
மூவ ரில்முன்மு தல்வன் முழங் கார்கட லுள்கிடந்து,
பூவுல ருந்திதன் னுள் புவனம் படைத் துண்டுமிழ்ந்த,
தேவர் கள்நா யகனைத் திருமா லிருஞ்சோலை நின்ற,
கோவ லர்கோவிந் தனைக் கொடி யேரிடை கூடுங்கொலோ.
பதவுரை
|
மூவரில் |
– |
த்ரிமூர்த்திகளுள் |
|
முன் முதல்வன் |
– |
முக்கியனும் |
|
முழங்கு ஆர் |
– |
(திரைக்கிளப்பத்தாலே கோஷித்தல் பொருந்திய |
|
கடலுள் |
– |
திருப்பாற்கடலிலே |
|
கிடந்து |
– |
திருக்கண்வளர்ந்தருளி |
|
உந்தி |
– |
திருநாபியில் |
|
அலர் |
– |
மலர்கின்ற |
|
பூ தன்னுள் |
– |
(தாமரைப்) பூவிலே |
|
புவனம் |
– |
உலகத்தை |
|
படைத்து |
– |
ஸ்ருஷ்டித்து |
|
உண்டு |
– |
(பிரளயகாலத்தில்) திருவயிற்றில்வைத்து நோக்கி |
|
உமிழ்ந்த |
– |
பிறகு வெளிப்படுத்திவனும் |
|
தேவர்கள் நாயகனை |
– |
நித்யஸூரிகளுக்கு நாதனும் |
|
திருமாலிருஞ் சோலை நின்ற |
– |
திருமாலிருஞ்சோலை மலையில் நிற்பவனுமான |
|
கோவலர் கோவிந்தனை |
– |
கோபாலக்ருஷ்ணனான எம்பெருமானை |
|
கொடி எர் இடை |
– |
கொடிபோன்ற இடையை யுடையளான என் மகள் |
|
கூடும் கொலோ |
– |
அணையப்டபெறுவளோ? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- திருமாலிருஞ்சோலையழகரோடே கூடும்படியான பாக்கியம் எனக்குக் கிடைக்குமோ கிடைக்காதோவென்று ஆழ்வார் கவலைப்படுதல் இத்திருமொழிக்குப் பரமதாற்பரியம்.
மூவரில் முன் முதல்வன் – இந்திரனைக்கூட்டி மூவராக்கி, அம்மூவர்களிற் காட்டிலும் முபுமுதற் கடவுளாயிருப்பவன் என்றும் பொருள் கூறுவர். இரண்டாமடியில் “பூ வளருந்தி“ என்றும் பாடமுண்டு. புவனம் – வடசொல்.
English Translation
The first-cause Lord of the tri-murti, the Lord who reclines in the ocean, the Lord who made the universe on his lotus navel, then swallowed it, and remade it, the Lord of the celestials, the cowherd-Lord Govinda, resides in Tirumalirumsolai. Will my creeper-thin-waisted daughter blend with him today? I wonder!
