(1809)

(1809)

மின்னுமா வல்லியும் வஞ்சியும் வென்றநுண் ணிடைநுடங்கும்,

அன்னமென் னடையினார் கலவியை அருவருத் தஞ்சி னாயேல்,

துன்னுமா மணிமுடிப் பஞ்சவர்க் காகிமுன் தூது சென்ற

மன்னனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே.

 

பதவுரை

நெஞ்சே

மின்னும்

மின்னலையும்

மா வல்லியும்

அழகிய கொடியையும்

வஞ்சியும்

வஞ்சிக் கொம்பையும்

வென்ற

தோற்பித்த

நுண் இடை

நுட்பமான இடுப்பு

நுடங்கும்

துவளும்படியிருப்பவர்களாய்

அன்னம் மென் நடையினார்

அன்னம்போல் மெதுவான நடையையுடையரான மாதருடைய

கல்வியை

புணர்ச்சியை

அருவருத்து

வெறுத்து

அஞ்சினாய்ஏல்

அச்சமுறுவாயாகில்,

முன்

முன்பொரு கால்

துன்னு மாமணி முடி பஞ்சவர்க்கு ஆகி

நெருங்கின சிறந்த ரத்னங்களிழைத்த கிரீடமணியத் தக்க பஞ்சபாண்டவர்களுக்காக

தூது சென்ற

தூது நடந்த

மன்னால் வல்லவாழ் மருவு-

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “மின்னும்  ஆவல்லியும்“ என்று பிரித்தார் அரும்பதவுரைகாரர், அதுவேண்டா, “மாவல்லியும்“ என்றே பிரிக்க. அஞ்சினாயேல் -“பாம்போடொரு கூரையிலே பயின்றாற்போல்“ என்னுமாபோலே இவர்களோடே கூடி நாம் எங்ஙனே வாழ்வது! என்று பயமுண்டாகில் என்றபடி.

துன்னமாமணிமுடிப் பஞ்சவர்க்கு -கண்ணபிரான் துரியோதனாதியர் பக்கல் தூது செல்லுங்காலத்தில் பாண்டவர்கள் முடியிழந்து கிடந்தாலும் அவர்களே முடிபுனைந்து அரசாட்சிபுரிய உரிய யார் என்னும் பகவதபிப்பிராயத்தால இங்ஙனமருளிச் செய்யப்பட்ட தென்க.

 

English Translation

O Heart! If you despise the union with dames of swan-like gait and lightning-thin waist, and fear that life then learn to speak of the glory of Tiruvallavai, abode of the Lord who went as a messenger for the crowned kings, the, five Pandavas

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top