(1802)

(1802)

கவ்வைக் களிற்று மன்னர் மாளக் கலிமான்தேர்

ஐவர்க் காய்,அன் றமரில் உய்த்தான் ஊர்போலும்,

மைவைத் திலங்கு கண்ணார் தங்கள் மொழியொப்பான்,

கொவ்வைக் கனிவாய்க் கிள்ளை பேசும் குறுங்யுஉடியே.

 

பதவுரை

கொவ்வைக் கனிவாய்

கோவைப்பழம்போற் சிவந்த வாயையுடைய

கிள்ளை

கிளிகளானவை

மை வைத்து இலங்கு கண்ணார் தங்கள் மொழி ஒப்பான்

மையிட்டு விளங்குகின்ற கண்களையுடைய பெண்களில் பேச்சுப்போல

பேசும்

பேசுமிடமான

குறுங்குடி

திருக்குறுங்குடியானது

அன்று

முன்பொருகால்

அமரில்

பாரதயுத்தத்தில்

கவ்வை களிறு மன்னர்

பேரொலிகொண்ட யானைகளை யுடையவரான அரசர்கள்

மாள

மாண்டுபோம்படியாக

ஐவர்க்கு ஆய்

பஞ்சபாண்டவர்களுக்காக

கலி மா தேர்

திண்ணிய பெரியதேரை

உய்த்தான்

நடத்தின பெருமானுடைய

ஊர்போலும்

திவ்யதேசமாகும்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பாரதப்போரில் பாண்டவர்களுக்குப் பக்ஷபாதியாயிருந்து எதிரரசர்கள் தொலையும்படியாகப் பார்த்தஸாரதியாய்த் தேரைநடத்தின பெருமான் அப்படிப்பட்ட ஆச்ரிதபக்ஷபாதம் இன்னமும் விளங்கத் திருக்கோயில் கொண்டிருக்குமிடம் திருக்குறுங்குடி. இத்தலம், கிளிகள் பெண்களைப்போலே அழகாகப் பேசும்படியான நிலைமை வாய்ந்தது.

களிறு+மன்னர், களிற்று மன்னர் கவ்வை என்று இரைச்சலுக்குப் பெயர், பெரிய கோஷம் செய்யவல்ல யானைகளென்றபடி.

கொவ்வைக் கனினாய்க்கிள்ளை -கிளிகளுக்குக் கோவைப்பழம் இனிய உணவாதலால் கொவ்வைக் கனியை வாயிலையுடைய கிளி என்று முரைக்கலா மென்ப.

 

English Translation

The red berry-beaked parrots speak like the collyrium-lined bright-eyed dames in kurungudi.  It is the abode of the Lord who drove the chariot for the five in the war that killed many elephant-seated mighty kings

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top